India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கம்பத்தைச் சேர்ந்தவர் நாராயணன் இவர் மைக் செட் கடை வைத்து தொழில் செய்து வந்தார். அந்த தொழிலில் மிகவும் நஷ்டம் ஏற்பட்டதால் மனவேதனையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மைக் செட் தொழிலை கைவிட்டு கூலி வேலைக்கு செல்ல தொடங்கினார். இந்நிலையில் இவர் நேற்று திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராமம் – தம்முரெட்டியை சேர்ந்த தம்பதி முருகேஷ் – சிந்து (22). நிறைமாத கர்ப்பிணியான சிந்துவிற்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட 108 ஆம்புலன்ஸ் மூலம் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானது. பின் 108 வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி மருத்துவ நுட்புனர் சிந்துவிற்கு பிரசவம் பார்த்தார். இதில்
சிந்துவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அங்கு தொலைபேசி மூலம் வரும் புகார்கள், கண்காணிப்புக்குழு, கணினியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க தொ.பேசி. எண்.18004259769 என்ற எண்களிலும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று மாலை விடுத்துள்ள அறிவிப்பில், தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் குறுஞ்செய்திகள் வழியாகவோ சமூக ஊடகங்கள் வழியாகவோ பரப்பினால் 24 மணி நேரமும் செயல்படும் காவல்துறை கைபேசி எண் 9498101765 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள வரை நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை பெட்டியில் மனுக்களாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காட்பாடி பகுதியை சேர்ந்தவர் முருகன்(42) இவர் நேற்று (மார்ச் 17) கோட்டை சுற்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி முருகனிடம் இருந்து 5 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து முருகன் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பணம் பறித்து சென்ற தாமோதரன்(28), விக்னேஷ் (25), மணிகண்டன் (28) கைது செய்தனர்
துவரங்குறிச்சி அடுத்த முக்கன் பாலம் அருகே இன்று மாலை திருச்சி நோக்கி சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் மற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன. தென்னந்தோப்புகளில் உள்ள மரங்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன் வீடுகளில் வளர்க்கப்படும் மரங்களிலும் வெள்ளை ஈ தாக்குதல் பரவி வருகிறது. தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் 40 ஆண்டு பயன்தரக் கூடிய மரங்கள் கருகி பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தென்காசியில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.மேற்படி கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் “சுவிதா ” என்ற செயலியில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக் கூட்டங்கள்,கட்சி ஊர்வலங்கள் ஆகியவற்றிற்கு அனுமதி பெறும் முறைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தனர்.
ராமநாதபுரம் புது அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் மதியழகன். நிதி தணிக்கை உதவி இயக்குநராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.பூட்டிக் கிடந்த இவரது வீட்டில் 45 பவுன் நகை மார்ச் 8ல் திருடு போனது.இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் மோகன் (39), மதுரை காளவாசல், சம்மட்டிபுரம் மகேந்திரன் (33) ஆகியோரை பஜார் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.