India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன, இந்நிலையில் கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில், சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ஆப்களின் லிங்குகளை தேவையில்லாமல் பதிவிறக்கம் செய்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என எச்சரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என்று கூறி நூதன மோசடியில் ஈடுபடுவதாக மாவட்ட காவல்துறை ஒரு எச்சரிக்கை அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது; வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பகுதி நேர வேலை வாய்ப்பு என உங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் நம்பி ஏமாற வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு சைபர் காவல் தொடர்பு எண் 1930ஐ அழைக்கவும் என கூறியுள்ளனர். SHARE!!
தெலுங்கானா மாநிலம், கெம்பனாஅவென்யூ குடியிருப்பைச்சோ்ந்த ராம்தா்தாகூா்மகன் விகாஸ் (19).பெரியகுளம்அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை நண்பா்களுடன் பெரியகுளம்அருகே நஞ்சியாவட்டம் பகுதியிஉள்ள தனியாா் கிணற்றில் குளிக்கச்சென்றார்.அப்போது ஏதிர்பாரத விதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
நாமக்கல் நகருக்கு புகழையும், பெருமையும் சேர்ப்பது நாமக்கல் மலைக்கோட்டை. 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில் நரசிம்மர் கோயிலும், தர்காவும் உள்ளது. நாமக்கல்லில் பிரபலமான சுற்றுலா தலமாகவும் இந்த மலைக்கோட்டை விளங்குகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட, திப்பு சுல்தான் இந்த கோட்டையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
உறுவையாறு பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் கிருஷ்ணகாந்த்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாலை உறுவையாறு ஏரிக்கரை பகுதியில் கிருஷ்ணகாந்த்தை சந்தோஷ், அவரது நண்பர் முருகன் ஆகியோர் கத்தியால் வெட்டிவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்த சூழலில் நேற்றிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்க ஊரில் மழை பெய்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க.
விக்கிரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பதாக புகார் வந்ததன்பேரில், விக்கிரமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாகமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்த மலர் (55) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மாவட்டத்தில் கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான, தொகுதி திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.பிளஸ் 2 வகுப்பு வரை கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், 15 நாட்கள் கிராமங்களில் தங்கும் ஆர்வம் இருக்க வேண்டும். மாதத்திற்கு ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியம் மற்றும் 30 சதவீத பயணப்படி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
அஞ்செட்டி அடுத்த ஜேசுராஜபுரத்தை சேர்ந்தவர் மதலைமுத்து (65). ஏப்ரல்.25 அன்று, ஆடு, மாடுகளை, மேய்ச்சலுக்காக சின்னமலை காப்புக்காட்டிற்கு ஓட்டி சென்றார். மாலையில், மதலைமுத்து வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நேற்று முன்தினம் காலை வனத்துக்குள் சென்று பார்த்தபோது, இவர் இறந்து கிடந்தார். வனத்துறை ஆய்வில் யானைகள் தாக்கி கொன்றது தெரிய வந்தது. போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருபர அள்ளி பகுதியை சேர்ந்தவர் மந்திரி(55). உணவு சாப்பிட்டு கைகழுவ சென்றபோது இவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். அரூர் தீயனைப்பு துறையினர், இவரது உடலை மீட்டு அரூர் G.H. க்கு அனுப்பி வைத்தனர். இவரது இறப்பு குறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.