India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக போட்டியிடவுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் மீண்டும் திமுகவே களமிறங்கவுள்ளது. இந்த முறையும் தூத்துக்குடியில் கனிமொழியே போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த தனராசு பதவி உயர்வு பெற்று ஏடிஎஸ்பி ஆக நாமக்கல் மதுவிலக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த எஸ். ஆனந்தராஜ் நாமக்கல் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார். நாமக்கல்லில் 1946 முதல் இதுவரை 59 பேர் டிஎஸ்பியாக பணியாற்றிய வந்தனர். இந்நிலையில் 60 வது டிஎஸ்பியாக ஆனந்தராஜ் பொறுப்பேற்றுள்ளார்.
வடகாடு அருகே வாணக்கன்காடு முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல்விழா நேற்று நடைபெற்றது. விழாவில் போலீசார் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டதாக, கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன், ராஜேஷ், ராம்குமார்,அஜித், ஷீதரன் , வீரையா,குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜ் ஆகிய 10 பேர் மீது வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தென்காசி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக சார்பில் தனுஷ் குமார் வெற்றி பெற்ற எம்பியானார்.மீண்டும் தனுஷ் குமார் தென்காசி வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா அல்லது திமுக வேறு யாருக்காவது வாய்ப்பளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக ஜோதிமணி போட்டியிடு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.
பழனி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வட்டாட்சியர் சக்திவேல் அவர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் இன்று 18.03.2024-பழனி( FST-1 TEAM ) தணிக்கையில் ஈடுபட்ட போது உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரது வாகனத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்ச ரூபாய் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றார்.
2024 மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களை தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் கே.ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திருவள்ளூரில் மீண்டும் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது.
2024-மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி தொகுதியிலும் காங்கிரஸ் களம் இறங்குவதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் காங். சார்பில் செல்லகுமார் வெற்றி பெற்று எம்பியானது குறிப்பிடத்தக்கத்து. அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் உட்பட 15 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக வி.வைத்திலிங்கம் போட்டியிடு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.