Tamilnadu

News March 16, 2024

புதுச்சேரியில் ஏப்ரல்.19ம் தேதி தேர்தல்

image

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு ஏப்.19ம் தேதி தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச்.20ம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ள ஆணையம், வேட்புமனு தாக்கல் நிறைவு மார்ச்.27 என்றும், வேட்புமனு திரும்பப் பெற கடைசி தேதி மார்ச்.30 என்றும் கூறியுள்ளது. வேட்புமனு பரிசீலனை மார்ச்.28ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜீன்.4ம் தேதியும் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2024

தருமபுரி: வனத்துறை முக்கிய அறிவிப்பு

image

கோடை காலம் தொடங்கிவிட்டதால், தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி வன சரக்கத்திற்கு உட்பட்ட பகுதி வறண்டு காணப்படுகிறது. எனவே வன சாலைகளை பயன்படுத்துவோர் தீப்பற்ற கூடிய பொருட்கள் மற்றும் பீடி, சிகரெட் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். மேலும் காட்டிற்குள் தீ வைக்கும் நபர்களை வனத்துறையில் பிடித்துக் கொடுத்தாலோ அல்லது தகவல் கொடுத்தாலோ தக்க சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2024

விளவங்கோட்டில் ஏப்.19 இடைத்தேர்தல்!

image

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்.19ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோட்டில் காங். எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில் அந்த தொகுதி காலியானது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்.19 தேதியே விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்லை நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

News March 16, 2024

திருச்சி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

image

திருச்சி விமான நிலையம் இன்று வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் உற்சாக வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

புளியந்தோப்பு: ரூ.8.84 கோடியில் சிறுவர் பூங்கா

image

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் ஊராட்சி புளியந்தோப்பு பகுதியில் நீர்வளத்துறை சார்பில், சமுத்திரம் ஏரியில் ரூ.8.84 கோடி மதிப்பில் புதிதாக சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (16.03.2024) திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

நாகர்கோவில் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள்

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 33வது வார்டுக்குட்பட்ட தொழிலாளர் நல அலுவலக வளாகத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தல் மற்றும் தொல்லவிளை பாரதியார் தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைத்தல் ஆகிய பணிகள் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News March 16, 2024

அரக்கோணம் அருகே மோப்ப நாய்களுக்கு பயிற்சி

image

அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரி குப்பத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு கட்டட இடிபாடுகளில் சிக்குபவர்களை மீட்பதற்கு 10 மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோப்ப நாய்களின் மோப்ப பயிற்சி மற்றும் அடிப்படை செயல்திறன் பயிற்சி இன்று நடைபெற்றது. கமாண்டன்ட் சைலேந்திரசிங், துணை கமாண்டன்ட் கோரக்சிங் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News March 16, 2024

கோபி அருகே தார் சாலை பணிக்கு பூமி பூஜை

image

கோபி தொகுதிக்கு உட்பட்ட கோட்டுபுள்ளம்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். உடன் யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் அனுராதா, ஊராட்சி தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

பெரம்பலூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு

image

பெரம்பலூர் அடுத்த எளம்பலூர், கவுல்பாளையம் ஆலாம்பாடி, நொச்சியம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் இருந்து ஒரு சில பகுதிகளை பெரம்பலூரில் இணைத்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று(மார்ச் 15) எளம்பலூர் ஊராட்சி தலைவர் சித்ராதேவி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News March 16, 2024

காஞ்சிபுரம்: 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதை வலியுறுத்தி இன்று(16.03.2024)  விழிப்புணர்வு எடுத்துக்கொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

error: Content is protected !!