India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததையடுத்து வேலூர் அண்ணா சாலையில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.கார் உள்ளிட்ட வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு. இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலையில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர திமுக வழக்கறிஞர் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நேற்று இரவு ஒழுகினசேரி மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் புதிதாக பொறுப்பேற்ற அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அவர்களது பணி சிறக்க மேயர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மானூர் கிராமத்தில் நேற்று (மார்ச்.16) இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மரக்காணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தென்களவாய் பழனி இல்லங்கள் தோறும் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் ஏராளமான ஒன்றிய மாவட்ட கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
திருச்சி கலை காவிரி நுண்கலை கல்லூரியில் நேற்று 19வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை
வழங்கினார். இந்த விழாவானது கல்லூரி செயலர் எஸ்.லூயிஸ் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றதில் கல்லூரி முதல்வர் ப. நடராஜன் வரவேற்புரை ஆற்றினாா் . திருச்சி மறைமாவட்ட ஆயா் எஸ்.ஆரோக்யராஜ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்.19 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனத்தை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.
நேற்று இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். மரத்தடிநிழலில் தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றும்
கனிவாக பேசியும் குறைகளை கேட்டறிந்த ஆட்சியரை இப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏற்கனவே 1950 டோல் ஃப்ரீ என் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 18004252735 டோல் ஃப்ரீ எண்ணுக்கும் அதேபோல் லேண்ட்லைன் நம்பரான 04322-229860, 229870, 229880 என்ற எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் தெற்கு பகுதி நான்காவது மண்டலம் 57 ஆவது வார்டு சிவசக்தி நகர் மற்றும் குறிஞ்சி தெருக்களில் குடிநீர் தொட்டிகளை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் நேற்று(மார்ச்.16) குடிநீர் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு வந்தது. 57 ஆவது வட்ட செயலாளர் ஐசக் முன்னிலையில் மண்டல குழு தலைவர். காமராஜர் திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் 04286-280081, 04286-280082, 04286-280083, 04286-280084 ஆகிய தொலைபேசி எண்களிலும், 18004257021 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.