India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவது குறித்து பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை 1800-425-7020, 0427-2450031,0427-2450032, 0427-2450035 மற்றும் 0427-2450046 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9489939699 என்ற வாட்ஸ்-ஆப் செயலி மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என சேலம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 04172-273190, 91,92,93 என்ற எண்களிலும் இலவச அழைப்பு எண்1800 425 7015 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான வளர்மதி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடத்தை விதிகள் இன்று(மார்ச் 16) மாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், மக்கள் தொடர்பு திட்டம் முகாம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் போன்றவை நடைபெறாது மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.
மக்களை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேர்தல் பறக்கும் படை வாகனத்தினை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் நேற்று (மார்ச் 16) தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
கேரளாவிலிருந்து குமரிக்கு கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்தை பொதுமக்கள் இன்று(மார்ச் 16) அதிகாலை சிறை பிடித்து குழித்துறை நகராட்சியில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்து வாகனத்தில் மருத்துவ மற்றும் மீன் கழிவுகள் இருப்பதை உறுதி செய்து ரூ.1,00,000 அபராதம் விதித்தனர். சிறை பிடிக்கப்பட்ட வாகனத்தை களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நாவலூர் பகுதியில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச் 16) மாலை முதல் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரங்கள், பலகைகள் மற்றும் அரசு சாதனை திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தேர்தல் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழித்தடத்தில் எழும்பூர், கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் இன்று (17.03.2024) காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. அதனால் சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- அரக்கோணம் இடையே இரு மார்க்கங்களிலும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலபூதனூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமான வயலில் அறுவடை செய்து வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 4500 வைக்கோல் கட்டுகளை தனது வீட்டுக்குப் பின்னால் உள்ள தகர கொட்டகையில் அடுக்கி வைத்துள்ளார். திடீரென வைக்கோல் போரில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் 4500 வைக்கோல் கட்டுகளும் தீயில் எரிந்து நாசமானது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம புற, நகர் புற பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.