News March 17, 2024
குமரியில் ரூ.1 லட்சம் அபராதம்

கேரளாவிலிருந்து குமரிக்கு கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்தை பொதுமக்கள் இன்று(மார்ச் 16) அதிகாலை சிறை பிடித்து குழித்துறை நகராட்சியில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்து வாகனத்தில் மருத்துவ மற்றும் மீன் கழிவுகள் இருப்பதை உறுதி செய்து ரூ.1,00,000 அபராதம் விதித்தனர். சிறை பிடிக்கப்பட்ட வாகனத்தை களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News July 8, 2025
உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <
News July 8, 2025
குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை.8) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை 42.30 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை 71.25 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை 13.35 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை 13.45 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 471 கனஅடி, பெருஞ்சாணிக்கு 129 கன அடி நீர்வரத்தும் உள்ளது.
News July 8, 2025
குமரியில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக ரூ.11,100 – ரூ.35,100 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்காக விண்ணப்பங்கள் கன்னியாகுமரி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT