India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 108.86 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறைந்தபட்சமாக 84.74 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
நெல்லையிலிருந்து திருச்சி வழியாக காசி, திருவேணி சங்கமம், அயோத்தி மற்றும் கயா ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று வர IRCTC சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி துவங்கும் இந்த சுற்றுலா ரயில் மொத்தம் ஒன்பது நாட்கள் பயணம் செய்கிறது. இந்த ரயிலில் ஒரு நபருக்கு ரூபாய் 18 ஆயிரத்து 550 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தெற்கு ஒன்றிய திமுக சார்பில், சூளகிரி ரவுண்டானாவில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் நடந்த தண்ணீர் பந்தலை ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் உள்ளிட்டவை வழங்கினார். அப்போது ஒன்றிய துணை செயலாளர் முனிச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தேனி (வடக்கு) நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று அல்லிநகரம் பகுதியில் நீர் மோர் பந்தலை தேனி (வடக்கு) மாவட்ட செயலாளர் காசிமாயன் திறந்து வைத்து, தர்பூசணி பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின்போது, தேனி வடக்கு நகர செயலாளர் குரு கணேசன் தலைமை வைத்தார். கழக அமைப்புச் செயலாளர் கதிர்காமு முன்னிலை வைத்தார். உடன் தேனி நகர பொறுப்பாளர்கள் உள்ளனர்.
ஈரோட்டில் நாளுக்கு நாள் 100 டிகிரி தாண்டி பொதுமக்களை வாட்டி வருகிறது. இந்த தாக்கத்தை குறைப்பதற்காக பொதுமக்கள் அனுதினமும் நுங்கு இளநீர்,மோர், தயிர் போன்றவர்களை பயன்படுத்தி தாக்கத்தை குறைத்து வருகின்றனர். இந்த நிலையில் திருநகர் காலனி பகுதியில் மோட்டார் மெக்கானிக் எதிர் எதிரே மின்விசிறி வைத்து தாகத்தை குறைக்கின்ற காட்சி வைரலாகி வருகிறது.
ஈரோட்டில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005995950, ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் 9498168363, ஈரோடு மாவட்ட காவல் ஆய்வாளர் 8072628234, ஈரோடு மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் 9498175888 ஆகிய எண்ணில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான தகவல் தெரிவிக்கலாம்.
அக்கினி வெயில் நாளை காலை 9.30 க்கு தொடங்குகிறது. இதை தொடர்ந்து, மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள கோத்தகிரி, கோடநாடு, குன்னூர், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகின்றனர். இதனால், ஏற்கனவே இருக்கும் வழித்தட பேருந்துகள் போதியதாக இல்லை. இதை கருத்தில் கொண்ட மாநில போக்குவரத்து துறை கோவையில் இருந்து நாளை முதல் 25 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கல்வராயன் மலைத்தொடரில் உள்ள தும்பராம்பட்டு கிராமத்தின் அருகில் அமைந்துள்ளது தும்பராம்பட்டு குகை. குகைக்கு செல்லும் வழியில் தொட்டிமடுவு என்னும் சிற்றோடு இயற்கையோடு அமைந்துள்ளது. மிகச்சிறிய குகையான இதில் ஆதி மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் பொரிக்கப்பட்டுள்ளது. மனிதன், வேட்டைநாய், காளைமாடு உருவங்களும், மக்கள் நடனமாடுவது போன்ற உருவங்களும் பாறையில் பொரிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே இன்று (மே.3) வெயிலில் இளைஞர் சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியானார். சிங்கி குளத்தைச் சார்ந்த இளைஞர் ஐகோர்ட் ராஜா(35) காடுவெட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு கடும் வெயிலால் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்த அவருக்கு வலிப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரங்கம்பாடி அருகே வங்கக் கடலை ஒட்டியுள்ள டென்மார்க்காரர்களால் கட்டப்படது டேனிஷ் கோட்டை. இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்யப்பட்டு 1620 இல் கட்டப்பட்டது. 1947 க்கு பின்னர் இக்கோட்டை தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.