Tamilnadu

News May 7, 2024

ராணிபேட்டை: 32 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் +2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவர்கள் 5,742 பேரும், மாணவிகள் 6,659 பேரும் என மொத்தம் 12,401 மாணவர்கள் +2 பொதுத் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5,114 பேரும், மாணவிகள் 6,330 பேரும் என மொத்தம் 11,444 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகள் மற்றும் 27 தனியார் பள்ளிகள் என மொத்தம் 32 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

News May 7, 2024

கிருஷ்ணகிரி பாலிடெக்னிக் சேர்க்கை அறிவிப்பு

image

கிருஷ்ணகிரியில் பிரபலமான முறையில் இயங்கிவரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டில் (2024-2025) மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு இந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பயனடைந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2024

அரியலூர்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

image

அரியலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வெளிவந்த நிலையில் இன்று முதல் ஆன்லைனில் கல்லூரி படிப்பான இளநிலை படிப்புகளுக்கு உள்ளிட்ட 13 பாடப்பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவ மாணவிகள் www.tngasa.in என்ற இணைய வழியில் விண்ணப்பித்து மாணவ, மாணவிகள் அரசு கல்லூரியில் குறைந்த தொகையில் படிப்பை படிக்க பயன்படுத்திக் கொள்ள ஸ்ரீதரன் கல்லூரி முதல்வர் கூறியுள்ளார்.

News May 7, 2024

சிவகங்கை:  இளநீர் விலை ஏற்றம்

image

அக்னி நட்சத்திரம் வெயில் சுட்டெரிக்கும் வேளையில் பொதுமக்கள் உடல் சூட்டை தணிப்பதற்காக இளநீர் கடைகளை தேடி வருகிறார்கள். இதனால் இளநீர் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் இளநீர் திருப்புவனம் சாலையோர கடைகளில் ஒரு இளநீர் 70ரூபாய்க்கும், செவ்விளநீர் 80 ரூபாயக்கும் விற்கப்படுகிறது. விலை அதிகம் என்றாலும் பொதுமக்கள் இளநீரை விரும்பி பருகுகிறார்கள் .

News May 7, 2024

தூத்துக்குடி: பெண் தற்கொலை

image

சாயர்புரம் பட்டாண்டி விளையைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பேச்சியம்மாள் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். பேச்சியம்மாள் அடிக்கடி செல்போனில் பேசுவதை ஸ்ரீராம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பேச்சியம்மாள் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 7, 2024

ஜோலார்பேட்டையில் வாலிபர் பலி

image

மேற்கு வங்காளம் பார்பரா பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் லாகூர் (44). இவர் நேற்று ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும்போது திடிரென வலிப்பு நோய் ஏற்பட்டு கிழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.

News May 7, 2024

திண்டுக்கல் அருகே ஒருவர் வெட்டி கொலை

image

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கரியாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சோலையன் மகன் ஆண்டார்(55). இவர் தனது வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News May 7, 2024

தருமபுரி: வேலை செய்யும்போது உயிரிழந்த சோகம்!

image

தருமபுரி வட்டம் குண்டலபட்டி அருகே கிணற்றில் வேலை செய்யும்போது தவறி விழுந்து இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக நேற்று(மே 6) மாலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த மாரியப்பன் என்பவரை இறந்த நிலையிலும், மற்றொரு நபரை காயங்களுடனும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News May 7, 2024

பூதலூர்: சோழர் கால நந்தி, விஷ்ணு சிலைகள் கண்டெடுப்பு

image

பூதலூர் அருகே சித்திரக்குடியில் சத்தியா என்பவரின் நிலத்தில் நந்தி மற்றும் விஷ்ணு சிலைகள் பாதி புதைந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில், சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் ஆய்வில் ஈடுபட்டார். அதில், இந்த சிலைகள் கி.பி. 9 முதல் 10ம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும், சோழர் காலத்தில் முக்கிய பகுதியாகவும் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

News May 7, 2024

வாக்கு எண்ணும் மையம்: விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, நேரில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!