India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் பாராளுமன்ற தேர்தலையொட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே 2023-2024-ம் நிதியாண்டில் 31.03.2024 அன்று முடிவடையும் பேருந்து அட்டையினை 30-06-2024 வரை பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் சங்கீதா இன்று உத்தரவிட்டுள்ளார்.
பேச்சிப்பாறை அருகே வலிய-ஏலா பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற இளைஞர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிணந்தோடு பகுதியில் வைத்து இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர் வட்டம் சேலம் நெடுஞ்சாலை மஞ்சவாடி கணவாய் அருகில் மார்ச் 22 ஆம் தேதி இரும்பு தளவாடங்கள் ஏற்றிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் (லாரி) டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது.
ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாறு அணைக்கட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (45 ). இவர் இன்று காலை மினி லாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார். லாடவரம் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் வரும்போது சாலை ஓரம் இருந்த பனைமரத்தில் நிலை தடுமாறி மினி லாரி மோதியதில் சுந்தரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
மதுரை மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் வழக்கம் போல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கல்வி பாதிப்பதாக அதனை மாற்றக் கோரி மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். விசாரணையில், வாக்கு எண்ணிக்கை மையத்தை மாற்ற இயலாது என நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் வழக்கம் போல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
வடமதுரை பகுதியில் கடந்த ஆண்டு 2023ஆம் ஆண்டு 10 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மனோஜ் குமார்( 21) என்ற இளைஞரை வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி இன்று 21ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.3000 அபதாரம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
சென்னையில் புலம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளின் தேவை கூடியுள்ளது. இந்நிலையில் வீட்டு வாடகை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாடகை உயர்வுக்கு சொத்து வரியும் ஒரு காரணம் என சொத்து ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் 23, 24 ஆகிய 2 நாட்கள் விடுமுறை நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தாக்கல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இதுவரை 5 சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோயிலில் இன்று பிரம்மோற்சவ திருவிழாவின் 7 ஆம் நாள் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ ரங்கநாதப் பெருமாள் திருத்தேரில் அமர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்தார். 500க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று தேரை வடம்பிடித்து இழுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக சுந்தர் என்பவரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்ட பொழுது 82 வயது முதியவர் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என கோரிக்கை வைத்தார். உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விரைவில் கிடைக்கும் உத்தரவாதம் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.