Tamilnadu

News May 12, 2024

நெல்லையில் கோர விபத்து; இருவர் மரணம்

image

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இன்று (மே12) காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணமடைந்தனர். சங்கர்நகர் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் லாரியின் பின்புறம் வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 12, 2024

திருச்சி:காவல் தனி படையினர் ஆயுதபடைக்கு மாற்றம்

image

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில், தடை செய்யப்பட்ட,லாட்டரி, புகையிலை பொருட்கள், குற்ற சம்பவங்களை கண்காணிக்க SI லியோ ரஞ்சித்குமார் தலைமையில் 4 காவலர்கள் கொண்ட தனி படை அமைக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.இத்தனிப்படை மீது பல்வேறு புகார் வந்ததையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அனைவரையும்,நேற்று, மாலை, ஆயுத படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

News May 12, 2024

மயிலாடுதுறையில் மர்ம மரணம் 

image

மயிலாடுதுறையில் புனுகீஸ்வரர் வடக்கு வீதியை சேர்ந்த கண்ணையன் என்பவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.தொடர்ந்து அருகே உள்ள வீட்டின் மாடியில் கண்ணையன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை போலீசார் இறந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 12, 2024

புதிய மோசடி காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை: மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு போன் செய்து அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் Gpay QR code scan செய்யுமாறு கூறினால் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் QR code scan செய்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க தென்காசி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

News May 12, 2024

+2 முடித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் +2 முடித்த மாணவ / மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியில் 13.05.2024 காலை நடைபெறுகிறது. இதில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர் கல்வியில் சேர வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

News May 12, 2024

இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு முதிர்வு தொகை பெற அழைப்பு

image

தமிழக அரசின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் வைப்பு நிதி பெற்று 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் வைப்பு நிதி பத்திரத்துடன் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்(அ)மகளிர் ஊர் நல அலுவலர்களை நேரில் சென்று முதிர்வு தொகை பெறுவதற்காக, வைப்பு நிதி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கோவை ஆட்சியர்  அறிவுறுத்தியுள்ளார்.

News May 12, 2024

மீன்பிடி தடை காலம் மீன்களின் வரத்து குறைவு

image

தமிழிகத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் வேலூர்  மீன் மார்க்கெட்டிற்கு இன்று (மே 12) மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் உயர்ந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ 1600, சிறிய வஞ்சரம் மீன் ரூ 800, இறால் ரூ 450 முதல் 600, கட்லா ரூ 160, நண்டு ரூ 400 முதல் 450, மத்தி ரூ 140 முதல் 160 என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.

News May 12, 2024

வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்

image

திண்டுக்கல் அடுத்த என்.பஞ்சம்பட்டியை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி சொந்த ஊர் திரும்பினர். இன்று அதிகாலை திண்டுக்கல் இ.பி காலனி பிரிவு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் காயமடைந்த நிலையில் இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 12, 2024

ஆம்பூர் அருகே கார் மோதியதில் ஒருவர் பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னான் மகன் ரங்கநாதன் (55). இவர் நேற்று (மே.11) இரவு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது கார் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 12, 2024

ஆந்திரா எல்லையில் தீவிர சோதனை

image

ஆந்திர மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆந்திர மாநில எல்லையில் வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது . வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த செயலில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எல்லையோர டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆந்திர மாநில முழுவதும் மது கடைகள் மூடப்பட்டுள்ளன.

error: Content is protected !!