India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம். ரமேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். திருவாரூர், சித்தமல்லியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி எஸ்.ஜி முருகையனின் மகனான எஸ்.ஜி.எம்.ரமேஷ், 2022ஆம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து பொதுக்கூட்டம், போராட்டத்திற்கு ஆட்களை திரட்டுவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த இவரது செல்வாக்கை அறிந்த பாஜக தற்போது இவரை களமிறக்கியுள்ளது.
தஞ்சையில் இன்று காலை நேரத்தில் முதலமைச்சர் நடைபயணம் மேற்கொண்டபடி வாக்கு சேகரித்தார்.சத்யா விளையாட்டு மைதானம், காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை முதலமைச்சர் சந்தித்தார். அப்பகுதியில் பொதுமக்கள் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சோதனைச்சாவடி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்ட போது தேனியில் இருந்து மதுரைக்கு அவ்வழியாக சென்ற ஈச்சர் வாகனத்தை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 3 கிலோ 600 கிராம் தங்கம், 1/2 கிலோ வெள்ளியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (19). இவர் நேற்று தனது நண்பர் தினேஷ் (19) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வைகை அணையை சுற்றி பார்க்க வந்தனர். இருவரும் டூவீலரில் வீடு திரும்பும் போது ஜம்புலிபுத்தூர் பெரிய பாலத்தில் எதிரில் வந்த லோடுவேன் மோதியதில் இருவரும் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கேயம் தாலுகா பரஞ்சேரி வழி காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன், கூலித் தொழிலாளி. இவர் காங்கேயம் ஈரோடு சாலையில் முள்ளிபுரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது மூணாறை சேர்ந்த சுப்பிரமணியன் ஓட்டிவந்த லாரி முருகேசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
மதுரை மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு நாளை முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்க உள்ளதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 2751 வாக்குச்சாவடிகளில் 13,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு 3 கட்டங்களாக அந்தந்த சட்டசபை தொகுதி வாரியாக உதவித்தேர்தல் அலுவலர்களால் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதால், அனைவரும் தவறாமல் பங்கேற்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையில் நேற்று இரவு சென்னை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்த நிஷாந்த் (22) என்பவர் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் பொன்.பாலகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் ரஞ்சன் குமார் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன?
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, விளாப்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் குழந்தைகள் இல்லாததால் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தியா நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் கார்த்தியாயினி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் விசிக திருமாவளவன், அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் போட்டியிடுவதால் இத்தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. அதிமுக வின் அதிதீவிர விசுவாசியாக திகழ்ந்த கார்த்தியாயினி ஜெயலலிதா மறைந்த பின் ஒரு சில மாதங்களிலேயே பாஜகவில் இணைந்தார். இவர் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர்.
Sorry, no posts matched your criteria.