Tamilnadu

News March 23, 2024

பொள்ளாச்சி தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ளன. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பெஞ்சமின் கிருபாகரன் போட்டியிடுவார் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

காவிரி ஆற்றில் குவிந்த முருக பக்தர்கள்

image

பங்குனி உத்திரவிழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி கொடு முடிகாவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று திரண்டனர். படித்துறை, வட்டக்கொம்மனை மற்றும் மணல்மேடு பகுதிகளில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் பலர் தீர்த்தம் முத்தரித்தனர். மேளதாளம் அரோகரா முழங்க கோஷத்துடன் மகுடேஸ்வரர், வீரநாராயணப்பெருமாளை தரிசனம் செய்து, பாதயாத்திரையாக பழநி மலை கோவிலுக்கு புறப்பட்டனர்.

News March 23, 2024

நெல்லை அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணி குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

News March 23, 2024

சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட மல்லூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம்-கரூர் ரயில் 06837 இன்று முதல் 30ம் தேதி வரை மாலை 06.00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 07.00 மணிக்கு புறப்படும். இதேபோல் மறு மார்க்கத்தில், கரூர்-சேலம் ரயில் 06838 கரூரில் இரவு 07.55 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இரவு 09.05 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

கடலூர் அருகே அதிரடி ரெய்டு 

image

விருத்தாசலம் (ச.ம.தொ) தேர்தல் பறக்கும் படை அதிகாரியான ராதிகா தலைமையிலான குழுவினர் கண்டப்பன்குறிச்சி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் ராஜேஷ் குமார் (35) என்பவர் 79 ஆயிரத்து 665 ரூபாயை எவ்வித ஆவணமுமின்றி வைத்திருந்தார். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து துணை தாசில்தார் கோவிந்தனிடம் ஒப்படைத்தார்.

News March 23, 2024

விருதுநகரில் அமைச்சர் உதயநிதி இன்று பிரச்சாரம்

image

விருதுநகர் மாவட்டத்தில் இன்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். மாவட்டத்தில் ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி மற்றும் விருதுநகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து மாலை 5 மணி அளவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

News March 23, 2024

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

image

வெள்ளாளவிடுதி ஊராட்சியில் குடிநீர் வராததை கண்டித்து நேற்று கறம்பக்குடி- கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

News March 23, 2024

மயிலாடுதுறை அருகே அதிரடி ரெய்டு 

image

சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொள்ளிடம் சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் செல்வராஜ் தலைமையில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீர்காழி சேந்தங்குடி பகுதியை சேர்ந்த கனிவண்ணன் என்பவர் தனது காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவனிடம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 23, 2024

திமுக வேட்பாளர் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் வரவேற்பு.

image

தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ புளியங்குடி நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி ஆகியோர் புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு வருகை தந்தனர் நகரத் தலைவர் அப்துல்ரகுமான் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது நகர செயலாளர் ஷேக் காதர் மைதீன் அனைவரையும் வரவேற்றார்.

News March 23, 2024

காஞ்சியில் நான்கு முனை போட்டி! ஜெயிக்கப் போவது யாரு

image

காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் ஆறு சட்டமன்றத்தை உள்ளடக்கிய தொகுதியில் திமுக சார்பில் செல்வம், அதிமுக சார்பில் ராஜசேகர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் என 4 முனை போட்டியாக காஞ்சிபுரம் தொகுதி களம் காண்கிறது. நான்கு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

error: Content is protected !!