Tamilnadu

News March 23, 2024

தேனியில் டிடிவி தினகரன் போட்டி!

image

தேனி எம்பி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட வேண்டும் என தானும், தனது மகன்களும் கேட்டுக்கொண்டதாக இன்று தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், தங்கள் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார். இதன்மூலம் தேனியில் பலத்த போட்டிக்கு வாய்ப்புள்ளது. காரணம் திமுக சார்பில் தங்கத்தமிழ்ச்செல்வன் களத்தில் உள்ளார். இதுபோக அதிமுகவின் இரட்டை இலையும் களமாடுகிறது.

News March 23, 2024

அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவப்படை அணிவிப்பு

image

ரமக்குடியில் இன்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.  வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அச்சமின்றி வாக்களிப்பதற்காக பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார், துணை ராணுவ படையினர்கள் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து பஜார் வரை கொடி அணிவகுப்பு நடத்தினர்.

News March 23, 2024

விழுப்புரம் அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சி.வி.சண்முகம், செஞ்சி ராமச்சந்திரன், இ.பாலமுருகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

News March 23, 2024

 13 ஆயிரம் பேர் “ஆப்சென்ட்”

image

+2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பள்ளி மாணவர்கள், 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 94 ஆயிரத்து 75 மாணவ-மாணவிகளில், சுமார் 13ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைவிட ‘ஆப்சென்ட்’ எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

News March 23, 2024

கடற்கரையில் ஆட்சியர் தூய்மை பணி

image

நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் தூய்மை பணி இன்று நடைப்பெற்றது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் தலைமை தாங்கி கடற்கரை தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தமிழ் ஒளி, மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, நகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வாக்காளர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

News March 23, 2024

திருவள்ளூர் அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பி.வேணுகோபால், அப்துல் ரஹீம், ரமணா, மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

News March 23, 2024

தேனியில் டிடிவி தினகரன் போட்டி!

image

தேனி எம்பி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட வேண்டும் என தானும், தனது மகன்களும் கேட்டுக்கொண்டதாக இன்று தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், தங்கள் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார். இதன்மூலம் தேனியில் பலத்த போட்டிக்கு வாய்ப்புள்ளது. காரணம் திமுக சார்பில் தங்கத்தமிழ்ச்செல்வன் களத்தில் உள்ளார். இதுபோக அதிமுகவின் இரட்டை இலையும் களமாடுகிறது.

News March 23, 2024

அரியலூரில் தேர்தல் முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம்

image

அரியலூரில் மக்களவைத் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ண தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் இருப்பு, சமூக வலைத்தளங்களை கண்காணித்தல், தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள், தேர்தல் செலவினங்கள், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

News March 23, 2024

நீலகிரி அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் எஸ்.பி.வேலுமணி, ப.தனபால், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

News March 23, 2024

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக வேட்பாளர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளரான வழக்கறிஞர் பாலு பொதுமக்களிடையே இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் வேட்பாளர் பாலுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

error: Content is protected !!