India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கு திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோயில், உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமை வகித்தார். இதில் ரூ.41,60,182 பணம், 203 கிராம் தங்கம் மற்றும் 2,732 கிராம் வெள்ளி இருந்தது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக சேலம் தொகுதியில் விக்னேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இதில் சேலம் மாவட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளர்களான வெங்கடாசலம், இளங்கோவன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளரான செல்வராஜ் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அசோகன், அவர்கள் அறிமுக கூட்டம் அரூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. உடன் அம்மா பேரவை தலைவர், எஸ்.ஆர் வெற்றிவேல் தருமபுரி நகர மன்ற தலைவர், பூக்கடை ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
மராட்டிய மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு வரக்கூடிய எலுமிச்சம்பழம் கடந்த சில மாதங்களாக வராத காரணத்தினால் ஆந்திராவில் இருந்து மட்டுமே எலுமிச்சை விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக எலுமிச்சையின் விலை 8 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று சேலம் மாவட்டத்தில் ஒரு மூட்டை எலுமிச்சை 3, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சியில் கடந்த 17.2.2024ம் தேதி 23 1/2பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் சூசை ராஜ், ஷேக் தாவூத், யாசர் அராபத் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் மூவரின் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் 15 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்ததால், இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேற்று இரவு உத்தரவிட்டார்.
பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நினைவு தின நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய குழு சார்பில் நடைபெற்றது. பகத்சிங் வரை படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. செங்கோட்டைக்கு முருகேசன் மாதேஸ்வரி ஜெயபால் கோவிந்தசாமி மாணிக்கம் அய்யனார் மகாலிங்கம் காளியப்பன் மணி ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், கடலூர் உழவர் சந்தை அருகே இன்று ஆட்டோ டிரைவரிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ஆட்டோக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், தாறுமாறாக நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அப்போது ஆட்டோ டிரைவர்கள் உடன் இருந்தனர்.
ஒட்டன்சத்திரம், பாச்சலூர் மலைகிராமம் அருகே சில தினங்களுக்கு முன் காட்டெருமை ஒருவரை முட்டி சம்பவம் இடத்தில் உயிரிழந்தாா். இந்நிலையில் சில நாட்களாக செம்பிரான்குலம் செல்லும் வழியில் வந்த யானை, அங்கிருந்த டிராக்டரை சாலையோரத்தில் தூக்கி வீசியது. இதனால், அவ்வழியாக வாகனத்தில் செல்வோர் அச்சத்தில் உள்ளனர். யானைகள் காட்டெருமைகள் இந்த பகுதியில் அதிகம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்
கோவையில் வரும் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் அதிமுக, பாஜக வேட்பாளர்களுக்கு இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. இதில் சிங்கை ராமச்சந்திரன் அகமதாபாத் IIM மற்றும் அண்ணாமலை லக்னோ IIM ல் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ பெரிய நாயகி சமேத நாகேஸ்வரன் திருக்கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னதாக சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருள சிறப்பு ஆராதனை நடைபெற்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.