India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவை தேர்தலையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் ஏப் 19ல் 100% வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா அழைப்பிதழ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் அந்த அழைப்பிதழில் உள்ள க்யூ. ஆர் கோடு ஸ்கேன் செய்தால் வாக்காளர்களின் வாக்குச்சாவடி அறியும் வசதி செய்யப்பட்டுள்ளது இந்த அழைப்பிதழ் அனைவரையும் கவர்ந்துள்ளது
‘கடலூர் பாராளுமன்ற தொகுதியின் இண்டியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் எம்.பி-யை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம்’ என்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பா.தாமரைச்செல்வன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசி (33).பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையில் இருந்த வெங்காயத்தை வீரம்மாள் என்பவர் வளர்த்து வரும் ஆடுகள் தின்றுவிட்டதாகவும்,இதனால் ஆடுகளை விரட்டியதால் ஆத்திரமடைந்த வீரம்மாள் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து மலையரசியை தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தாலுகா போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி ,தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர் திருமதி. சௌமியா அன்புமணி ராமதாஸ் (பாமக) அவர்கள் வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தருமபுரி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் வேட்பாளரை வரவேற்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று முன்தினம் 100.4 டிகிரி வெப்பநிலை பதிவான நிலையில் நேற்று 101.7 டிகிரி ஆக உயர்ந்துள்ளது. உஷ்ணத்தை உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன் உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியேறி சீக்கிரத்திலேயே களைப்பு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒசூர் அடுத்துள்ள பாரந்தூர் சாலையில், ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது. பூனப்பள்ளி வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.27 ஆயிரம் மதிப்பிலான 240 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த பாரந்தூர் கிராமத்தை சேர்ந்த முருகேஷ் (33) என்பவரை கைது செய்தனர்.
நாகர்கோவில் – கோவை ரயில் சேவை இன்று (மார்ச். 24) முதல் நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் நாகர்கோவில் – கோவை, கோவை – நாகர்கோவில் விரைவு ரயில்கள் மார்ச் 24, 25, 26, 27 உள்ளிட்ட தேதிகளில் ரத்து செய்யப்படும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே மூடியனுர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (21). இவர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் காரியாபட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பாண்டியன் நகர் பகுதியில் எதிரே வந்த காரின் மீது இருசக்கர வாகன மோதியதில் இளைஞர் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு.
தென்காசி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா நாளை (மார்ச் 25 ) நடைபெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் இன்று மாலை திருவிழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு சாஸ்தா கோயில்கள் சுத்தப்படுத்தப்பட்டு வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளன சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு மற்றும் ஆன்மீக கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் திருவிழா தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தங்கள் வருகைதந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மாவட்டத்தில் 100% வாக்குபதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.