India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்த மீஞ்சூர் திமுக ஒன்றிய குழு தலைவர் ரவி மற்றும் பூமிநாதன் ஆகியோரிடமிருந்து ₹500 நோட்டுகள் இருந்த திமுக தலைவரின் படம் பிரிண்ட் செய்யப்பட்ட கிஃப்ட் கவர்கள் மற்றும் ₹50000 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், இவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாகே சங்கத் பல்வந்த் வசம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் இன்று மக்களின் நலன் கருதி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பயணிக்கும் பயணிகள் சிலிண்டர், பெட்ரோல், டீசல், பட்டாசு ஆகியவற்றை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறுவது தண்டனைக்குரியது எனவும் எச்சரித்துள்ளது.
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதில் பட்டுக்கோட்டை களத்தூரை சேர்ந்த பாலமுருகன் புதுக்கோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் குடும்பத்துடன் கார்களில் வந்திருந்தனர். பின்னர் அவர்கள்
சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தனர். அப்போது 2 கார்களின் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த செல்போன்கள், மடிக்கணினி, ரூ.700 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
சங்கரன்கோயிலிலில் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருடன், திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ஈஸ்வரன் ஆகியோர்
சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட வாக்காளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
விருதுநகர் கேகேஎஸ்எஸ்என் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(41). இவர் பந்தல் போடும் தொழிலாளியாக உள்ளார். இந்நிலையில் மன வேதனையில் இருந்த மணிகண்டன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரர் சக்திவேல்(57) கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரம் அருகே மேல்தவிர்த்தாம்பட்டை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது வீட்டின் அருகில் உள்ள வக்கார மாரி ஏரியில் இருந்து இன்று அதிகாலை வெளியேறிய முதலை ஒன்று செல்வகுமாரின் வீட்டிற்குள் புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து 8 அடி நீளமுடைய முதலையை லாவகமாக பிடித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பார்சல் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ரயில்களிலும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையொட்டி பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் X தளத்தில் பதிவிட்டதாவது, மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்’
என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏப்ரல்.19 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அதன்படி, ஏப்ரல்.4ஆம் தேதி மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
காரைக்காலில் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில், எத்தனை மாணவர்கள் மற்றும் எத்தனை தேர்வு மையங்கள் என்பது குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் இன்று வெளியிட்டார். இதில், மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதில், மொத்தம் 2,479 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.