India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“மக்களவைத் தேர்தலில் அதிமுக தோற்கடிக்கப்பட்டது திமுகவால் அல்ல, அக்கட்சியின் துரோகிகளால் தோற்கடிக்கப்பட்டது” என்று, முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார், மதுரையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மேலும், ” அதிமுகவில் ஒவ்வொரு பதவியையும் அனுபவித்துவிட்டு , கட்சிக்கு எதிராகச் சென்று விட்டார்” என்று ஓபிஎஸ்ஸை கடுமையாக உதயகுமார் விமர்சித்தார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாமக வேட்பாளர் தேவதாஸ் ராமசாமி என்பவரும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜெகதீசன் என்பவரும் போட்டியிட்டனர் இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பாமக வேட்பாளரை விட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீசன் 2,362 வாக்குகள் அதிகம் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்
புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி அவர் மீண்டும் பிரதமராககூடாது என்றும் மேலும் புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் தார்மீக பொறுப்பேற்று தங்களுடைய பதவியில் ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும்.
கூட்டணி இல்லாமல் பாஜகவில் ஆட்சி அமைக்க முடியாது இவ்வாறு அவர் கூறினார்.
நடந்து முடிந்த கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நேற்று காலை 8 மணி முதல் விறு விறுப்பாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜய் வசந்த் எம்.பி அமோக வெற்றி பெற்றார். வெற்றி சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்றுக்கொண்ட அவர், தனது தந்தையான வசந்தகுமார் நினைவிடத்தில் சான்றிதழை வைத்து ஆசி பெற்றார். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
தேனி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நேற்று(ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டதில் இறுதியாக திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா வெற்றி சான்றிதழை வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
விருதுநகர் மக்களைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். விஜயகாந்தின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்ட தொகுதியில், அவர் தோல்வி அடைந்திருப்பது கட்சியினர், ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் சறுக்கியது எங்கே? மக்களே உங்கள் கருத்தை கமென்ட் செய்யவும்.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜூன் 4) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 158 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக நேற்று ஒரே நாளில் 8 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று(ஜூன் 4) எண்ணப்பட்ட அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் திமுக தலைமையில் போட்டியிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சி 40/40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து திருப்போரூர் ஒன்றியம், மாமல்லபுரம் பேரூராட்சியில் திமுக நகர செயலாளர் விஸ்வநாதன், கவுன்சிலர் மோகன்குமார் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:1. கனிமொழி (திமுக) – 540729 2. சிவசாமி வேலுமணி (அதிமுக) – 147991 3. எஸ்.டி.ஆர்.விஜயசீலன்(த.மா.கா.) – 122380 4. ரொவீனா ரூத் ஜோன் (நா.த.க.) – 120300 5. என்பி ராஜா (நாம் இந்தியர் கட்சி) – 6640மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 6072 – 290 வாக்குகள் பெற்றுள்ளனர். நோட்டாவில் 9682 வாக்குகள் பதிவானது.
நாகை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட எஸ் ஜி எம் ரமேஷ் கோவிந்த் ஆகிய எனக்கு வாக்களித்து அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்த நாகை பாராளுமன்ற தொகுதி பொதுமக்கள் அனைவருக்கும் தலை வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் வை செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Sorry, no posts matched your criteria.