Tamilnadu

News June 5, 2024

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆண் சடலம்

image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இது தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 5, 2024

வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் 

image

கடலூர், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக ஏற்றி அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபார்த்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் இன்று காலை கொண்டுவரப்பட்டு கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

News June 5, 2024

விவசாயிகளுக்கு உளுந்து மகசூல் போட்டி

image

வேளாண்மைதுறை சார்பில் விவசாயிக்கு உளுந்து சாகுபடி போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 50 சென்ட் அளவில் மட்டும் அறுவடை செய்யப்படும். முதல் பரிசாக ரூ.250000, 2 ஆம் பரிசாக ரூ.150000, 3 ஆம் பரிசாக ரூ.100000 வழங்கப்படும். இதில், குறைந்தப்பட்ச மகசூல் எக்டருக்கு 888 கிலோ. 15.03.2025-க்குள் அறுவடை செய்ய வேண்டும். இதற்கு அருகாமையிலுள்ள வேளாண்மை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

News June 5, 2024

மதுரை : கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

image

மதுரை விமான நிலையத்தில் வாகன கட்டணம் அதிகரித்து உள்ளதால் வாகனம் ஓட்டுநர்களுக்கும், ஊழியர்களுக்கும், வாக்கு வாதம் ஏற்பட்டது. வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் ஜூன்.1 ஆம் தேதி முதல் மும்பை சேர்ந்த தனியார் நிறுவனம் வாகன கட்டணம் வசூல் செய்கிறது. வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக ஓட்டுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

News June 5, 2024

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் ஆட்சியர்

image

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டம் தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி பயின்று மேற்படிப்பில் சேரும் பட்டப்படிப்பு பட்டய படிப்பு அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூபாய் 1000 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நேரடியாக அனுப்பப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

News June 5, 2024

எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற துரை வைகோ

image

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சோமரசன்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டியை திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் ஆக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ இன்று நேரில் சந்தித்தார். மேலும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நன்றி செலுத்தி எம்எல்ஏவிடம் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார்.

News June 5, 2024

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2002 முதல் 2007 வரையான காலகட்டங்களில் விண்ணப்பித்து பயனடைந்து வைப்புத் தொகை பத்திரம் பெறப்பட்டு தற்போது 18 வயது முதிர்வடைந்த பெண் குழந்தைகளுக்கு முதிர்வு தொகை வழங்கப்பட உள்ளது. இதன் பொருட்டு வங்கி கணக்கு புத்தகம், மாற்று சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் பிடிஓ அலுவலகம் அணுகலாம் என ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்

News June 5, 2024

அரசு மருத்துவமனைக்கு சென்ற திமுக எம்.பி

image

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் இவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர். தேர்தலுக்காக பணியை ராஜினாமா செய்தவர். வெற்றி பெற்றதும் இன்று 5-ம் தேதி ராணி ஸ்ரீகுமார் தான் பணியாற்றிய அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் பணியாளர்கள் ஆகியோருடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

News June 5, 2024

செல்வ பெருந்தகையை சந்தித்த தம்பி ராமையா

image

நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையா மகன் உமாபதி மற்றும் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா ஆகியோரது திருமணம் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் தம்பி ராமையா சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனுக்கு வந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகையை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்.

News June 5, 2024

திருவாரூர்: அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு மாணவர்களுக்கு திட்டம் தொடங்குவது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் தாளாளர்கள் கலந்து கொண்டனர். தாளாளர்கள் கலந்து கொள்ளாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு கூட்டத்தில் பங்கேற்றனர்.

error: Content is protected !!