India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசு கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்கள் மற்றும் மாணவியருக்கென 26 விடுதிகள் நடத்துகிறது. பள்ளி விடுதியில் சேர வரும் 14-ம்தேதிக்குள்ளும் , கல்லூரி விடுதியில் சேர 15-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை, விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் வழங்கலாம் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்
மத்திய அரசு நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல் தீ விபத்துக்கள் நிலச்சரிவு சுரங்க மீட்பு போன்ற நடவடிக்கைகளில் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு ஜீவன் ரக்க்ஷா பதக்க விருது வழங்கி வருகிறது. இந்த விருதினை பெற தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் இம்மாத 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று கேட்டுக் கொண்டுள்ளார்
மக்களவை தேர்தல் தேதி மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. இதனால் குறை தீர்வு கூட்டம் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தல் நடத்தை விதிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. இதையடுத்து வேலூரில் எம்பி, எம்எல்ஏ, மேயர், நகராட்சி தலைவர்கள் அறைகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் அகஸ்டின் பால். இவர் தனது மனைவியின் 25வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவதற்காக வீடு முழுவதும் அலங்காரம் செய்ய நேற்று(ஜூன் 6) சீரியல் லைட் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இத்தம்பதிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில், மனைவி கண்முன்னே கணவன் உயிர் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி பாஜக அலுவலகத்தில் நேற்று பேட்டியளித்த முன்னாள் எம்.பி நரசிம்மன் பாஜக மாநில தலைவரின் தலைமையை ஏற்று அதிமுக கூட்டணிக்கு வரலாம் என தெரிவித்தார். மேலும்,
வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுகவினர் பலர் தன்னை சந்தித்து, வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி இல்லையென்றால் தோற்கடிக்கப்படுவோம் என்று தெரிவித்ததாக கூறினார். எனவே பாஜக அதிமுக கூட்டணி அவசியம் என்று தெரிவித்தார்.
புதுவை மின்துறையில் ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற இளநிலை, உதவி பொறியாளர்கள் 5 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணியில் சேர விரும்புபவர்கள் 64 வயதுக்கு உட்பட்ட வர்களாக இருக்கவேண்டும். பணியில் சேர விரும்புபவர்கள் தங்களது முழு விபரங்களை se1ped, pon@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவை தொகுதியில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஓட்டு பதிவு இயந்திரங்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறைக்கு நேற்று (ஜூன்.6) கொண்டு வரப்பட்டன. தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 2450 ஓட்டுப்பதிவு இயந்திரம், தலா 1225 வி.வி.பேட், கட்டுப்பாட்டு கருவிகள் பாதுகாப்பு வைப்பறைக்கு கொண்டு வரப்பட்டு அவை போலீஸ் பாதுகாப்புடன் பூட்டி வைக்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் 19 மி.மீ, வல்லம் 20 மி.மீ, குருங்குளம் 16.30 மி.மீ, திருக்காட்டுப்பள்ளி 40 மி.மீ, பாபநாசம் 25 மி.மீ, கும்பகோணம் 13.20 மிமீ, நெய்வாசலில் 11.80 மி.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக திருவையாறில் 45 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 288.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி காங் வேட்பாளர் கே. கோபிநாத் அவர்கள் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்காக பரப்புரை மேற்கொண்ட மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஓய். பிரகாஷ் ஆகியோர் நேற்று சந்தித்து நன்றி கூறினர். இந்த சந்திப்பில் கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் மற்றும் ஒசூர் மேயர் சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
அஞ்செட்டி- 6.40 மிமீ,
பாரூர்- 17.40 மிமீ, தேன்கனிக்கோட்டை – 35.00 மிமீ, ஓசூர்-33.10 மிமீ, கிருஷ்ணகிரி -23.40 மிமீ, நெடுங்கல்-6.00 மிமீ, பெனுகொண்டாபுரம் – 22.20 மிமீ, போச்சம்பள்ளி -17.70 மிமீ, ராயக்கோட்டை-33.00 மிமீ, சூளகிரி-20.00 மிமீ, தாலி-5.00 மிமீ, ஊத்தங்கரை-11.00 மிமீ,
சின்னார் அணை-18.00 மிமீ,கெலவரப்பள்ளி அணை-54.20 மிமீ, கே.ஆர்.பி அணை-67.60 மிமீ,பாம்பார் அணை- 37.00 மிமீ மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.