India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://me-qr.com/rxKmeKR4 என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தின் மூலம் (9.6.2024) நடத்தப்படவுள்ள தொகுதி IV தேர்வினை சிறப்பாக நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் (ம) தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் கற்பகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் எந்த ஆண்டு இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் அதிகபட்சமாக 109 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.48 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறைந்தபட்சமாக 73.58 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமயில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி, மாவட்ட சமுக நல அலுவலர் சியாமளா தேவி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் பகுதியில் இன்று மாலை திடீரென மழை பெய்தது. காலை முதல் திண்டுக்கலில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின்றி காணப்பட்ட சூழ்நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
மேலும் வேலைக்குச் சென்று திரும்பிய பெண்கள் மழையினால் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்புபில் பல்கலைக்கழகத்தில் அனைத்து முதுகலை பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயில இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22 என நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு 26 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கான 29 விதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.
தென்காசி- விருதுநகர் வழித்தடத்தில் 100கி.மீ/மணி ஆக இயக்கப்பட்டு வந்த ரயில் இனி 110கி.மீ/மணி ஆக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் சென்னை ,மயிலாடுதுறை, மதுரை, வேளாங்கண்ணி, தாம்பரம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரிதும்பயனடைவார்கள். மேலும் விருதுநகரில் இணைப்பு ரயிலை பிடிக்கும் பயணிகளும் பயன்பெறுவார்கள்.
திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம் மூலம், திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த முகாம் 21.06.2024 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியும், ‘இண்டி கூட்டணியும் தேர்தலில் தோற்றுவிட்டது என்பதை ராகுல் காந்திக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது. மக்கள் அளித்த தீர்ப்பு பிரதமர் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான். பாஜகவை பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவுகள் கொண்டாடித் தீர்க்க வேண்டிய வெற்றி என்று கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.