Tamilnadu

News June 10, 2024

நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்

image

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் கற்பகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் மொத்தம் 34 நபர்களுக்கு ரூ.8,61,420 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

புதுச்சேரி: நிவாரணம் வழங்கிய முதல்வர்

image

புதுச்சேரியில் கடந்த மார்ச்.31ம் தேதி அன்று தேங்காய்திட்டு மரப்பாலம் மின் நிலையம் சுற்றுச்சுவர் ஒட்டியுள்ள வாய்க்கால் சீரமைக்கும் பணியின்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சத்தையும், காயமடைந்த மூன்று தொழிலாளர்களுக்கு தலா ரூ. 3 லட்சத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று வழங்கினார்.

News June 10, 2024

திருப்பத்தூர்: மாணவர்களுக்கு இலவச புத்தகம்

image

திருப்பத்தூர் அரசு பெண்கள் மீனாட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எ நல்லதம்பி சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். இதில், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர .

News June 10, 2024

புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர்

image

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “காலம் உள்ள வரை கலைஞர்” என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இப்புகைப்பட கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

News June 10, 2024

கால்நடைத்துறை கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம் அனக்குடி கிராமத்தில் கால்நடை துறையின் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதனை ஒட்டி கால்நடை துறையின் சார்பில் கால்நடைத்துறை அதிகாரிகளால் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கண்காட்சியில் இயற்கை முறையில் மாடுகளுக்கான மருந்துகள் பற்றி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கண்காட்சி பார்வையிட்டார்.

News June 10, 2024

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்”  திட்டமானது நான்காம் கட்டமாக ஜூன் 19ஆம் தேதி வேடசந்தூர் வட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டும் வரும் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News June 10, 2024

சிவகங்கையில் 1908 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

image

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 11 மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. 1804 வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.3 கோடியே 75 லட்சத்து 62ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. ஒட்டு மொத்தமாக 1,908 வழக்குகள் நேற்று முடிக்கப்பட்டது.

News June 10, 2024

சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம்

image

புதுச்சேரி சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசு தாரர்கள் நல சங்கத்தின் சார்பில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள கருணை அடிப்படையில் வழங்கப்படும் வாரிசுதாரர் பணி நியமனத்தை விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் 1 முறை தளர்வு அளித்து பணி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர் சங்கங்களின் ஆலோசனையின் பேரில் இயக்குநர் அலுவலக வளாகத்தில் இன்று ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News June 10, 2024

நாகையில் புத்தகங்கள் வழங்கிய ஆட்சியர் 

image

நாகை நகராட்சி நடுநிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மாணவர்களுக்கு புத்தக நோட்டுகளை வழங்கி,  மாணவ, மாணவிகளுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாமை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நாகையில் உள்ள 701 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

News June 10, 2024

கோரிக்கை மனுவை பெற்ற ஆட்சியர்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக 2 மாதங்களுக்கு பின் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிடம் நேரில் சென்று மனுக்களை பெற்ற ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார்.

error: Content is protected !!