Tamilnadu

News March 27, 2024

விளவங்கோடு பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அதிமுக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்த வகையில் விளவங்கோடு சட்டமன்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வி எஸ் நந்தினி விளவங்கோடு தேர்தல் பொறுப்பாளரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News March 27, 2024

தூத்துக்குடி: கனிமொழி சொத்து மதிப்பு எவ்வளவு?

image

தூத்துக்குடி எம்பி வேட்பாளர் கனிமொழி தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம் உள்ளிட்டவைகள் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.55 லட்சத்து 37 ஆயிரத்து 455 ஆகும்.

News March 27, 2024

திருப்பத்தூர்: அதிமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு

image

நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாரி ஊராட்சியைச் சேர்ந்த மாவட்ட அதிமுக அம்மா பேரவை செயலாளராக இருந்து வந்த கே ஜி ரமேஷ் என்பவர் இன்று திடீரென பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட சம்பவம் மாவட்டத்தில் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவுக்கு மாவட்டத்தில் தீயாக வேலை செய்த முக்கிய புள்ளிகளில் இவரும் ஒருவர்.

News March 27, 2024

தருமபுரி: கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

image

தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தனி மற்றும்மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் அவர்களது 9363962213 என்ற கைப்பேசி எண்ணில் அல்லது என்ற மின்னஞ்சல் முகவரி generallobs2024.dpi@gmail.com) தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தி இன்று தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

வேலூர்: ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு

image

வேலூா் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சாா்பில் புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏ.சி.சண்முகம் மற்றும் அவரது மனைவி லலிதா லட்சுமி ஆகியோா் பெயரில் மொத்தம் ரூ. 152 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரத்து 818 மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

திருப்பூர்: நாயை அடித்துக்கொன்ற கஞ்சா ஆசாமி

image

திருப்பூர்: மதுரையைச் சேர்ந்தவர் தஸ்தகீர்(40). அவிநாசி, வேலாயுதம்பாளையத்தில், நேற்று முன்தினம், கஞ்சா போதையில் தெருநாயை பிடித்து, பின்னங்கால்களை கட்டி, கட்டையால் கடுமையாக தாக்கினார். இதில் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த புகாரன்பேரில் அவிநாசி போலீசார், இறந்த நாயின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தஸ்தகீரை கைது செய்தனர்.

News March 27, 2024

நீலகிரி: பாராட்டை பெற்று வரும் அக்கா தங்கை

image

பந்தலுார் அருகே பாட்டவயல் கரும்பன்மூலா பகுதியை சேர்ந்த சைனுதின், சீனத் தம்பதி. இவர்களுக்கு பாத்திமத்து சுகைனா, ஷப்னா ஜாஸ்மின் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் எலும்பு சிதைவு நோய் உள்ளதால், உடல் வளர்ச்சி குன்றி நடமாட முடியாமலும், கை கால்களை நீட்ட முடியாமலும் உள்ளனர். இந்நிலையில் இருவரும் முறையே 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை உதவியாளர் உதவியுடன் எழுதினர். இது பாராட்டை பெற்றுவருகிறது.

News March 27, 2024

குமரி: கொத்தனார் மீது தாக்குதல்

image

குளச்சல் அருகே மாவிளையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (58). கொத்தனாரான இவர் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21) தனுஷ் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.  இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சுப்பிரமணியத்தை ஆகாஷ், தனுஷ் ஆகியோர் கம்பி, கம்பு மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணவாளகுறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 27, 2024

அரியலூர்: தந்தை, மகனுக்கு 10ஆண்டுகள் சிறை

image

அரியலூர் அருகே சிறுவளூரை சேர்ந்த சாமிநாதனுக்கும் கோவிந்தனுக்கும் இடையே கடந்த 2021ல் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் சாமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோவிந்தன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா 10ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

News March 27, 2024

கிருஷ்ணகிரி: தலைவிரித்தாடும் சைபர் மோசடி

image

கிருஷ்ணகிரி, சூளகிரி அருகேயுள்ள மேலுமலையைச் சேர்ந்தவர் கவிசந்துரு(27), தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம், இவரது செல்போனுக்கு குறைந்த பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மர்மநபர்கள் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். இதை நம்பிய கவிசந்துரு அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக ₹19,30,860-ஐ அனுப்பி ஏமாந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!