India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மக்களவை தேர்தலில் சுமார் 7500 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாகை சட்டப்பேரவை தொகுதியில் 220 வாக்குசாவடி மையங்களுக்கு 1240 அலுவலர்கள், கீழ்வேளூர் தொகுதியில் 203 வாக்குசாவடி மையங்களுக்கு 877 வாக்குசாவடி அலுவலர்கள், வேதாரண்யம் தொகுதியில் 227 வாக்கு சாவடி மையங்களுக்கு 1077 வாக்கு சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தலில் போட்டியிட 42 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் அதிமுக, இந்திய கூட்டணி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், நாதக & 3 சுயேச்சை உள்பட 7 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. ஏனைய மனுக்கள் மீது தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அரக்கோணம் மக்களவை தேர்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை நேற்று அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உடன் இருந்தார்.
தூத்துக்குடி பொன் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஜெகதீஷ் (33). இவர் நேற்று(மார்ச்.27) மோட்டார் பைக்கில் தூத்துக்குடி – மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்குச் சாலை அருகே வந்தபோது எதிரே வந்த கார் அவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரியில் இருந்து நேற்று மாலை விக்ரம் என்பவர் தனது காரில் பெருமாட்டுநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நந்திவரம் மலைமேடு சாலை அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனை மற்றும் ஹோட்டல் சுவரை இடித்து உடைத்துக்கொண்டு புகுந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ரஞ்சித் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளரின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் செல்வகணபதிக்கு வாக்குரிமை உள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் அவரது வேட்பு மனு நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றுடன் மக்களவை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று(மார்ச் 28) வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.
தேனி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள், வேட்பு மனுவோடு அவர் தாக்கல் செய்தார். அதில் டிடிவி தினகரன் ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாளி என்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை பாக்கி ரூ.28 கோடி எனவும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. அந்தந்த தொகுதிகளுக்காண பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்கள் 30ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தஞ்சாவூரில் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.16 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாகத் விடுவிக்கப்பட்டுள்ளது.
புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர் விடுமுறை வருவதால் தென் மாவட்டங்களுக்கு செல்ல வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று 505 பேருந்துகளும் நாளை 300 பேருந்துகளும் சனிக்கிழமை 345 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.