India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவருமான கணேசமூர்த்தி உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அ.கணேசமூர்த்தியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் துணை கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் நேற்று தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவலர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உட்கோட்டத்தில் உள்ள பதற்றமான வாக்கு சாவடி மையங்களான பவித்திரமாணிக்கம், காட்டூர், அகரத்திருநல்லூர், திருக்கண்ணமங்கை ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கனிமொழி எம்.பி போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனு பரிசீலனை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனையில் கனிமொழி எம்.பி யின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நெல்லையைச் சேர்ந்த ராக்கெட்ராஜா ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 2009-ம் ஆண்டில் வாகன சோதனையின் போது குண்டு வீசிய சம்பவத்தில் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று கூறி ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்த நிலையில், நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
விழுப்புரம் தனி நாடாளுமன்ற தொகுதி, பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று (மார்ச் 28) விழுப்புரத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவரை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்றார். அப்போது பொன்முடியின் வாகனத்தில் பானை சின்னம் இருப்பதை பார்த்த திருமா, புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன் விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
மக்களவை 24 தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான செல் போன் எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஹர்குன்ஜித்கௌர் I.A.S 94899 89145, அர்ஜூன் பேனர்ஜி I.R.S. 94899 89144 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா தெரிவித்துள்ளார்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது, தனது சொத்து மதிப்பினை குறிப்பிட்டு இருந்தார். அவர் 2006ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பொழுது தனது பெயரில் நகைகள் இல்லை என குறிப்பிட்டிருந்த நிலையில், தற்பொழுது 240 பவுன் நகை உள்ளதாக கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு நெல்லையில் வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகின்றது. இதனை தொடர்ந்து வேட்பு மனுவை திரும்ப பெற நினைக்கும் வேட்பாளர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.