India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் வனப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரி அருகில் உள்ள கரிக்கையூர் ஆதிவாசி கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் கோத்தகிரி காவல்துறை சார்பில் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் போக்சோ சட்டம் மற்றும் மாவோயிஸ்ட் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் இன்று (13.06.2024) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவர் ஆலயத்தில் அடுத்த மாதம் 12ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சேகர் மற்றும் செயல் அலுவலர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை நேரில் சந்தித்து விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 இந்தியர்கள் பலியானார்கள் என்ற துயர செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று புதுச்சேரி ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 305 தனியார் பள்ளி பேருந்துகளை இயக்கத் தடை விதித்து, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிப் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர கால வழி உள்ளிட்டவைக் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேரில் ஆய்வு நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
வரும் 15 ஆம் தேதி மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றி உட்பட முப்பெரும் விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து விழாவிற்கான மேடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை அமைச்சர் முத்துசாமி அருகில் இருந்து துரிதப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயின் உதவியுடன் அப்பகுதியை முழுவதுமாக சோதனையிட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 21 ஆம் தேதி, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு தொடர்பான விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய எண்ணை 86754 12356, 94990 55942 அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவுக்கு ஆறு உள்வட்டங்கள் உள்ளது. தினமும் ஒவ்வொரு உள்வட்டத்தில் உட்பட்ட வருவாய்கிராம பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகை தந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக அளிக்கலாம். அதன்படி இன்று(ஜூன் 13) திருப்பத்தூர் உள் வட்டத்துக்கு உட்பட்ட வருவாய் கிராம பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவாக கொடுத்து தீர்வு காணலாம்.
குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது சிறுவனும், 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இதில் 2 பேருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதால் சிறுமி கர்ப்பமானார். அதிக வயிற்று வலியும், ரத்தப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீசில் சிறுவன் மீது வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.