Tamilnadu

News March 28, 2024

திண்டுக்கல்: 17 மனுக்கள் நிராகரிப்பு

image

திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என – 35 மனுக்கள் பெறப்பட்டது. இதில் இன்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 18 மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் , 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

கோவை: கலெக்டர் அறிவுறுத்தல்

image

தேர்தல் நடத்தை விதிமுறை கண்காணிப்பு குழுவினர் சுற்றுலாப் பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளும் போது, பயணச்சீட்டு, ஹோட்டல் ரூம் புக்கிங் விபரங்களை சரிபார்த்த பின்னர், செலவிற்காக தொகை வைத்திருந்தால், முழு தொகையும் பறிமுதல் செய்யக்கூடாது எனவும், கைச்செலவுக்கு ரூ.10,000 யை தவிர்த்து மீதமுள்ள தொகையை பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் நேற்று தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

கடலூர்: ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வரை 30 பேர் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில்,  இன்று கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் அனைவரின் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது .இதில் தேமுதிக, காங்கிரஸ், பாமக, நாம் தமிழர் கட்சி போன்ற முக்கிய கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்கப்பட்டன. வேட்பு மனு பரிசீலனையில் வேட்பாளர்கள் கொடுத்துள்ள சொத்து விவரம் மற்றும் ஆவணங்கள் குறித்து பரிசீலனை நடைபெற்றது.

News March 28, 2024

சேலத்தில் 39 பேர் வேட்பு மனுதாக்கல்

image

சேலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட ஒரு பெண் உட்பட 39 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையிலும் வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

News March 28, 2024

அதிமுக பாஜக காங்கிரஸ் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ( மார்ச் 28 ) வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பரிசீலனையில் ஈடுபட்டனர். ஒரு வழியாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

News March 28, 2024

கள்ளக்குறிச்சியில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்

image

இன்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவினர் பரபரப்பான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான தொண்டர்கள் பெண்கள் என வெயிலை கூட பொருட்படுத்தாமல் சிறப்பாக ஓட்டு கேட்டு வருகின்றனர். பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள அதிமுகவினர் பட்டாசு மேல தாளங்கள் உடன் அதிமுக தொண்டர்களுக்கும் அளித்து வருகின்றனர்.

News March 28, 2024

அண்ணாமலைக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி

image

அண்ணாமலை நேற்று வேட்பு மனுத்தாக்கலுக்கு முன் கோவை கோனியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு சென்றார். அவர் உள்ளே நுழைந்த போது கோவை புதூரை சேர்ந்த ரவி, தேவிகா ஜோடி திருமணம் முடித்து சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்திருந்தனர். அப்போது, அண்ணாமலையை கண்டதும் தம்பதி ஓடி வந்து அண்ணாமலையின் காலில் விழுந்து வணங்கினர்.  அண்ணாமலை மணமக்களை மனதார வாழ்த்தி ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

News March 28, 2024

புதுவையில் எச்சரிக்கை

image

புதுவை இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் செய்திக் குறிப்பில்:- தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைத்து சிபிஐ அதிகாரி என்றும் உங்களுடைய பெயரில் வந்துள்ள பார்சலில் போதை பொருட்கள் உள்ளது என்றும் உங்களை கைது செய்யாமல் இருக்க ரூ.10 லட்சம் வரை பணத்தை செலுத்த வேண்டும் என்று மிரட்டுவார்கள். இது முற்றிலும் மிரட்டி பணம் பறிக்கும் குற்றவாளியின் செயல் எனவும் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

News March 28, 2024

அதிமுக அலுவலகம் திறப்பு

image

சிவகங்கை, திருப்பத்தூரில், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி பணிமனை என்ற அதிமுக அலுவலகம் மாவட்ட அவை தலைவர் ஏவி.நாகராஜன் தலைமையில், நகரச் செயலாளர் இப்ராம்ஷா ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சேவியர்தாஸ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 28, 2024

தேனி: 41 மதுபாட்டில்கள்: 2 பேர் கைது

image

தேனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தவசிராஜன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது காட்டுபத்திரகாளி அம்மன் கோயில் அருகே கூடலூரை சேர்ந்த ரமேஷ், வீரணன் ஆகிய இருவரும் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்றுக் கொண்டிருந்தனர். போலீசார் அருகில் இருந்த முட்புதரை சோதனையிட்டபோது, அரசு அனுமதி இன்றி விற்க வைத்திருந்த 41 மதுபாட்டில்களை கைப்பற்றினர். பின்னர் இருவரையும் கைது செய்தனர். 

error: Content is protected !!