Tamilnadu

News March 26, 2024

நெல்லையில் இதுவரை 23 மனுக்கள் தாக்கல்

image

நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு பிஜேபி, அதிமுக, சுயேட்சை உட்பட 3 பேர் கடந்த வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இன்று (மார்ச் 26) நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள், மாற்று வேட்பாளர்கள் உட்பட 20 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆகவே, இதுவரை மொத்தம் 23 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

News March 26, 2024

நாமக்கல் ஆட்சியர் முன்னெச்சரிக்கை

image

நாமக்கல்லில் வரும் நாட்களில் கோடை வெயிலானது வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால் கவனமாக இருக்கும் படியும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளான பருத்தி ஆடை, எடை குறைவான தளர்வான வெளிர் நிற ஆடைகளை உடுத்த வேண்டும்.மேலும் குடிநீர் எலுமிச்சை சாறு,இளநீர் பருக வேண்டும்.குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை பின் பற்ற வேண்டும் என ஆட்சியர் மரு.ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 26, 2024

ராணிப்பேட்டையில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இன்று(மார்ச்.26) மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாலாஜா ரோடு ரயில் நிலையங்களில் போலீசார் சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ கஞ்சா ராணிப்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து பெங்களூருவைச் சேர்ந்த குமாரசாமி, மதன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

News March 26, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராட்சத பலூன்

image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (மார்ச்.26) மக்களவைத் பொதுத் தேர்தலை முன்னிட்டு பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி தலைமையில் ஏற்றனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டது

News March 26, 2024

புதுகை அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்

image

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கந்தா்வகோட்டையில் தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகில் நேற்று(மார்ச்.25) தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம்  சாவக்காடு என்ற இடத்தைச் சோ்ந்த க.மோகன்தாஸ் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.பின்பு பறக்கும் படையினா் அவற்றை பறிமுதல் செய்தனர்.

News March 26, 2024

கடலூரில் எடப்பாடி 30 ஆம் தேதி பிரச்சாரம்!

image

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு ஆதரவாக வருகின்ற 30 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News March 26, 2024

விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு

image

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சி உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுவதால் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை மாலை 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

திருச்சி எஸ்.பி-யின் முக்கிய அறிக்கை

image

தமிழ்நாட்டில் வருகின்ற 19.4.2024 நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தல் பணிக்காக முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் காவல்துறையினர், முன்னாள் தீயணைப்பு துறையினர், முன்னாள் சிறை துறையினர் ஆகியோர் வருகின்ற 17/4/2024 முதல் 19/4/2024 வரை 3 நாட்கள் தேர்தல் பணியாற்ற விரும்புவோர், தங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விருப்பத்தினை தெரிவிக்க திருச்சி மாவட்ட எஸ்பி இன்று தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

தென்காசி ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு

image

சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணையின்போது வேன் டிரைவர் கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று, உயிரிழந்தார்.இதனிடையே, வேன் டிரைவர் இறந்ததற்கு இழப்பீடு மற்றும் வேலை வழங்க கோரி முருகனின் மனைவி மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஓட்டுநரின் மனைவி மீனா தொடர்ந்த வழக்கில் இன்று அங்கன்வாடி பணி வழங்க தென்காசி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News March 26, 2024

புதுவையில் 2 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை

image

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ரவுடிகளை ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்து வருகின்றனர். அதன்படி குருசுகுப்பம் பகுதியை சேர்ந்த ஜான்சன், குணசேகர் ஆகிய 2 பேர் ஊருக்குள் நுழைந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இவர்களை ஊருக்குள் நுழைய தடை விதிக்குமாறு முத்தியால் பேட்டை போலீசார் தேர்தல் அதிகாரி குலோத்துங்கனுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

error: Content is protected !!