India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி சார்பில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார் இந்நிலையில் நேற்று அமைச்சர்களுடன் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் இன்று மனு மீதான பரிசீலனை நடைபெற்றது இதில் திருமாவளவன் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 26 மனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்கப்பட்டன. 27 மனைகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு வாபஸ் தேதிக்கு பின் இறுதிப் போட்டியாளர்கள் விபரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது தொடர்ந்து பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பேச்சு வேட்பாளர்கள் மொத்தம் 51 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அதில் 13 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் மீதம் உள்ள வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டதாக காஞ்சிபுரம் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கலைச்செல்வி அறிவித்தார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி பகுதியில் இன்று விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் திருவிழா விழிப்புணர்வு அழைப்பிதழை வீடு வீடாக சென்று ஆட்சித்தலைவர் ஷஜீவனா வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார், சோலைமலை அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு
இன்று காலை
11:30 மணியளவில் பனசலாறு மலைக்கோயில்
ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இவ்விழாவில் அல்லிநகரம் கிராம கமிட்டி நிர்வாகிகளும் பக்தர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூடலூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் குமுளி கிராம பஞ்சாயத்து மற்றும் தேக்கடி ஹார்ட்டிகல்ச்சர் சொசைட்டி இணைந்து நடத்தும்16 வது மலர் கண்காட்சி மார்ச் 27 முதல் மே 12 வரை நடைபெறுகிறது. இதில் பல வகையான வண்ண மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் மற்றும் வீட்டு அலங்கார செடிகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நிலை குறைவால் மரணமடைந்தார் அவருக்கு மதிமுகவின் நாமக்கல் நகரக் கழகத்தின் சார்பில் நாமக்கல்லில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் நாமக்கல் நகர செயலாளர் வைகோ பாலு தலைமையில் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் தொண்டரணி அமைப்பாளர் மூர்த்தி தொழிலாளர் அணி சண்முகம் ஆபத்துகள் அணி அன்பு மாவட்ட பிரதிநிதி எருமப்பட்டி மனோகரன் கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாசை ஆதரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தீவிர பரப்புரை மேற்கொண்டார்.
புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளது. விழாவில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படிகள் , தேரோட்ட நிகழ்வின் போது நீர் மோர் பந்தல், அன்னதான கூடம் அமைக்க https://foscos.fssai.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து அனுமதி சான்று பெறுவது கட்டாயம் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை இன்று அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.