India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட தாக்கல், செய்யபட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உமா முன்னிலையில் நடைபெற்றது. இதில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 41 வேட்பாளர்கள் பட்டியலை மாவட்ட ஆட்சியர் உமா இன்று மாலை. வெளியிட்டுள்ளார்.
ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒன்றிய செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும் போது மண்வெட்டியால் துண்டான போதிலும் இரண்டு துண்டுகளும் தனித்தனி புழுவாகி அதற்கு உண்டான வேலையை செய்வது போல் நமது கட்சி நிர்வாகிகள் அனைவரும் வேட்பாளரின் வெற்றிக்காக செயல்படுவார்கள் என்றார்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கனிமொழி எம்பி வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவரை ஆதரித்து இன்று இரவு சமூக நலத்துறை அமைச்சருக்கு கீதா ஜீவன் முத்தையாபுரம் முள்ளக்காடு பொட்டல்காடு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.
புதுக்கோட்டை, அறந்தாங்கியை அடுத்த திருவாப்பாடியில் உள்ள ஏரியில் அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் சடலம் 27 ஆம் தேதி காலை கண்டெடுக்கப்பட்டது. விக்னேஷ் மரணத்திற்கு அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பெரியசாமியின் மகன் தமிழ்வேந்தன் , அவரது நண்பர் யோகேஸ்வரன் ஆகியோர்தான் காரணம் எனக் கூறிய அவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவப்பாடியில் விக்னேஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன்பு வரக்கூடிய வியாழக்கிழமை கிறிஸ்தவர்களால் கட்டளை வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கட்டளை வியாழக்கிழமையான இன்று விருத்தாசலம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பொன்னேரி அடுத்த புதுவாயல் GNT சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழவேற்காட்டில் இருந்து கும்முடிபூண்டிக்கு சென்ற பெர்னார்டு என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 4 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அதனை கைப்பற்றிய பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து 31.03.2024 தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் D.சேரலாதன், சின்னாளப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் C.மைக்கேல் டேவிட், கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் G.குமாரபாண்டியன் , உட்பட மாவட்ட காவல் எஸ்.பி பிரதீப், நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
திண்டுக்கல் மாநகர் மணிக்கூண்டு அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் அறிமுக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் வேட்பாளர் கயிலை ராஜனை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 26, வேட்பு மனுக்களில் 9, வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜ் ,அதிமுகவின் சுர்ஜித் சங்கர், பாரதிய ஜனதா கட்சியின் ரமேஷ், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா உள்ளிட்ட 9 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன
Sorry, no posts matched your criteria.