India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் திருச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல்ராஜ் தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை அப்போலின் கிளாட்ராஜ் தலைமையிலும் பாதம் கழுவும் திருச்சடங்கு சிறப்புத் திருப்பலியுடன் நடைபெற்றது.
தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் நேற்று(மார்ச் 28) அவர் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை மற்றும் நியூ காலனி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
சிவகங்கை மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024ஐ முன்னிட்டு, பொது தேர்தல் பார்வையாளர் ஹரிஷ், தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ்குமார் வி.திரிபாதி,I.R.S., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் ஆகியோர் தேர்தல் தொடர்பாக உரிய பணிகளை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக நியமிக்கப்பட்டுள்ள நியமன அலுவலர்களுடன் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டனர்.
மைசூா் – சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் ரயில்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்களும் எந்த சிரமமும் இன்றி கோடையை கழிப்பர் , ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரணி மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் இன்று முதற்கட்ட பிரச்சாரமாக ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேதாஜிபுரம் ஊராட்சியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். உடன் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், அதிமுக அமைப்பு செயலாளர், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர அதிமுக செயலாளர்கள், பேரூர் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் பல்வேறு அதிமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்று திருச்சி வந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள், விஜயபாஸ்கர், பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக, மதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, உட்பட சுயேச்சை வேட்பாளர்கள் மொத்தம் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 10 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மீதமுள்ள 38 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலை காலமானார். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
துறையூரில் இன்று மாலை பாலக்கரை கலைஞர் திடலில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுகிறதா? தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா? என கேள்வி எழுப்பினார்.
திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சட்டமன்ற தொகுதிக்கு 9 குழுக்கள் கண்காணிக்கபடுகிறது . இந்த நிலையில் மொத்தமாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் அதிகமாக போதைப்பொருள் பிடிபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தல் காரணமாக தேர்தல் விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவை இன்று வரை வரும் போதை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.