Tamilnadu

News March 29, 2024

தி.மலை: களத்தில் இறங்கிய கலெக்டர்

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் – ஆரணி செல்லும் சாலையில் மங்களமேடு பகுதியில் 2024 மக்களவை தேர்தலையொட்டி பறக்கும் படையினர் மூலம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாகன சோதனையில் ஈடுபட்டார். ஆவணங்கள் முறையாக கையாளப்படுகிறதா? என பார்வையிட்ட அவர் பறக்கும் படையினர் சோதனையிடும் முறையை நேரடியாக ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

News March 29, 2024

தேனியில் இனி குதூகலம்

image

தேனி மாவட்டம் சீலையம்பட்டியை மையமாகக் கொண்டு முல்லைப் பெரியாறு ஆறு உள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் இருந்து இளைஞர்கள் கோடைகால விடுமுறையை ஆனந்த குளியல் இட்டு கழிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், அனைத்து இளைஞர்களும் இங்கு வந்து ஆனந்த குளியல் இடுகின்றனர். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரைத் தொடங்கப்பட இருப்பதால் தண்ணீர் வரத்து சற்று மிக குறைவாக உள்ளது.

News March 29, 2024

ஈரோடு தொகுதியில் 45 மனுக்கள் ஏற்பு

image

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 52 வேட்பு மனுக்களில் கூடுதல் மனுக்கள், வயது குறைவு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது என 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 45 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாளை இறுதி நாளாகும் .

News March 29, 2024

போளூர்: பள்ளிக்கு விரைந்த ஆட்சியர்

image

2024 மக்களவை தேர்தலையொட்டி போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (29.03.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News March 29, 2024

கனிமொழி எம்பி பிரச்சார நிகழ்ச்சி விபரம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூசை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். வருகிற ஒன்றாம் தேதி மாலை 4 மணிக்கு வள்ளியூர் காமராஜர் சிலை அருகே பேசுகிறார். இரண்டாம் தேதி மாலை 4 மணிக்கு திருநெல்வேலி டவுன் வாகையடி முனை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என தேர்தல் பணி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

News March 29, 2024

கைதிகள் பற்களை பிடுங்கிய வழக்கு ஒத்திவைப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பகுதிகளில் விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், 11 பேர் திருநெல்வேலி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று (மார்ச் 28) ஆஜராகினர். இதில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 29, 2024

கடலூரில் பதநீர் விற்பனை படுஜோர்

image

கடலூர் பகுதியில் இன்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்துள்ளனர். சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. மேலும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பதநீர் வாங்கி குடித்தனர். இதனால் பதநீர் விற்பனை படுஜோராக நடந்தது. இதில் 200 மில்லி பதநீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News March 29, 2024

ஶ்ரீபெரும்புதூரில் பாஜக மாநில தலைவர் அ

image

ஶ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வி.என். வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தோழமை கட்சிகளுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஶ்ரீபெரும்புதூர் பகுதிக்கு வருகை புரிந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

News March 29, 2024

ஈரோடு: தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

image

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிப்பட்டி பகுதியில் 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி திருமண அழைப்பிதழை போல் தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு கொடுத்து நூதன பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் மேளம் இசைத்தபடியும் , பொம்மை வேடமிட்டும் 50-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் விழிப்புணர் ஏற்படுத்தினர்.

News March 29, 2024

திருச்சியில் பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

நாடாளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப்குமார் அவர்கள், இன்று நான்கு சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு ஆட்சியருடன் பேரணியை தொடங்கி வைத்தனர்.

error: Content is protected !!