India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான கண்ணியப்பிள்ளைபட்டி, பிச்சம்பட்டி,கதிர் நரசிங்கபுரம் போன்ற பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மல்லிகைப் பூக்களில் கருகல் நோய் ஏற்பட்டு பூக்கள் பாதிக்கப்படுவதால் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்து வருவதால் பூ விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொண்டமாநத்தம் சமாதி தெருவில் நேற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ராமநாதபுரம் ஜிப்மர் கிளை மருத்துவமனையில் அவர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். அப்போது, சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குடிநீர் மாதிரி களை அதிகாரிகள் ஆய்வுக் காக எடுத்து சென்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் 40 ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சோ்ந்த ஏபிபி பிராசஸர் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் சா்வதேச டிஜிட்டல் அதிகாரி ராஜேஷ் ராமசந்திரன், இந்திய ராணுவத்தின் இஎம்ஐ படைப்பிரிவு கார்னர் ஆா். விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனா்.
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் 3ம்ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் திருவண்ணாமலை மாவட்டம் இளங்குன்னி சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரேம்குமார்(19), முதலாண்டு மாணவர் பூபதி ஆகிய இருவரும் நேற்று, வாணியாறு அணையை சுற்றி பார்க்க சென்றனர். அணையில் இறங்கிய பிரேம்குமார் செல்போன் மூலம் போட்டோ எடுக்க கூறியுள்ளார். அப்போது அணையில் சேற்றில் சிக்கி பிரேம் குமார் உயிரிழந்தார்.
கவிஞர் தமிழ்ஒளி 60ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நேற்று தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு, தஞ்சை தமுஎகச தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், தமிழ்ஒளி நூற்றாண்டுக்குழு பொருளாளரும், கல்வியாளருமான தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, திருமயம் வட்டம் லேனா விளக்கு அருகில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக, 31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 181-திருமயம் சட்டமன்ற தொகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படை குழுவினர்களின் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேற்று நேரில் பார்வையிட்டார்.
INDI கூட்டணியின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேற்று (மார்ச் 29) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில இணைத்தலைவர் மகேந்திரன், திருநெல்வேலி மாநகர மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காமராஜ் பங்கேற்றனர்.
இலுப்பையூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னம்மாள். டேங்க் ஆப்ரேட்டரான இவர் நேற்று காலை அங்குள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் மின் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் பொன்னம்மாள் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் செந்துறை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில் மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நேற்று (மார்ச் 29) பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இந்த நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் எடுத்துக்கட்டி ஊராட்சியில் திமுகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இல்லத்தில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
Sorry, no posts matched your criteria.