India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாளிப்பட்டி, பெரிய தள்ளாடி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பேனா, அளவுகோல், பென்சில், பாகைமானி போன்ற தேர்வு உபகரணங்களை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வழங்கி நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வாழ்த்தினார்.
வாசுதேவநல்லூர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே கணேசன் என்பவர் கட்டிடம் மற்றும் கலைஞர் காலனியில் முருகேசன் என்பவரின் வீடு ஆகிய இடங்களில் ஐடி நிறுவனம் என்ற பெயரில் ஆன்லைன் லாட்டரி சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று வாசுதேவநல்லூர் போலீசார் சங்கனாபேரியைச் சேர்ந்த பசுபதி (28),சத்யா (23),ராணி ஸ்ரீ ஜான்சி (23),சுந்தரத்தாய் (25),கணேசன் (23) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்
நீலகிரி எம்பி தொகுதி பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘நீலகிரி தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளராக மஞ்சித் சிங் பரார் (94899 – 30725), காவல் பார்வையாளராக மனோஜ் குமார் (63796 – 52828) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல் புகார்களை கைப்பேசியிலோ (அ) நேரிலோ தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சீர்காழி அருகே திருமுல்லைவாசலை சேர்ந்த கவின்,ஜஸ்வந்த்,காளிதாஸ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இன்று காலை ராதாநல்லூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவின்,ஜஸ்வந்த் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த காளிதாஸை பொதுமக்கள் மீட்டு சீர்காழி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் நடிகை விந்தியா அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அம்மாப்பேட்டை அருகே கோவிலூர் கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா(59). இவரது மனைவிகள் செல்வராணி(55), ராணி(54) இருவரும் சகோதரிகள் ஆவர். இவரது பேரன் ஹரிஹரன்(10) நேற்று முன்தினம் இரவு பேரனை பஸ்சில் ஏற்றி விடுவதற்காக அழைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற கார் இருவர் மீதும் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரு – சென்னை டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, வழக்கமாக பெங்களூருவில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில்,மே 1 முதல் பெங்களூருவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். அதன்படி, ஒரு மணி நேரம் முன்பாக புறப்படவுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக புதுச்சேரியில் 27 பேரின் வெட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று(30.3.24) கடைசி நாளாகும், மாலை 5 மணி வரை தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம். இந்நிலையில் புதுச்சேரியில் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள்? என்ற இறுதி விவரம் தெரியவரும்.
மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட அடியக்கமங்கலம், திருவாரூர் நகரில் உள்ள காரைக்காட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை (29.03.2024) மாலை தேர்தல் பார்வையாளர் சரணப்பா நேரில் பார்வையிட்டார். அப்போது, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனிருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் அசையும், அசையா சொத்துகள் மொத்தமாக ரூ.53.45 கோடியிலும், தனக்கு ரூ.649 கோடி கடன் இருப்பதாகவும், தனக்கு காா் இல்லை என்றும் தனது தேர்தல் வேட்பு மனு தாக்கல் உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளாா்.
Sorry, no posts matched your criteria.