India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் லாரி தொழில் வளர்ச்சிக்கு வெற்றி பெறப்போகும் எம்பியின் பங்கு குறித்த வேட்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக தமிழ்மணி, திமுக மாதேஸ்வரன், நாம் தமிழர் கட்சி கனிமொழி, சுயேட்சை வேட்பாளர் டாக்டர் எழில் கலந்து கொண்டு லாரி தொழில் வளர்ச்சி குறித்து பேசினர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் ,மாற்றுத்திறனாளிகளுக்கு 12D தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டு வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 7749 வாக்காளர்களுக்கும் 10478 மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கும் 12D தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் விதமாக நீச்சல் கற்பித்தல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு
நேரிலோ அல்லது தொலைபேசி எண் 7401703504, 9677649197 வாயிலாகவோ சம்பந்தப்பட்ட தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் நாளை வாக்காளர் விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி மருத்துவக் கல்லூரியில் துவங்கி நடைபெற உள்ளது. கல்லூரி மாணவ மாணவியருக்கு தனித்தனியாக நடைபெற உள்ள இந்த மாரத்தான் காலை 6.30 மணியளவில் துவங்க உள்ளது. இதில் மாணவர்களுக்கு 10 கி.மீ தூரமும் மாணவியருக்கு 8 கி.மீ தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகையும் வழங்க உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணி நெல்லையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.15 வேட்பாளர்களுக்கு மேல் களத்தில் உள்ளதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்.
புதுகை மக்களவையின் கீழ் வரும் அறந்தாங்கி பகுதியில் இன்று ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்ணுக்கு ஓபிஎஸ் பணம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் கண்காணிப்பு அலுவலர் அருண் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதேபோல், மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த நேரத்திற்கு முன்பாக கூட்டம் நடத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி, சாணார்பட்டி, கட்டக்குளம், உள்ளிட்ட பகுதிகளில் இன்று தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் விரலை துண்டாக வெட்டினாலும் இரட்டை இலையை தவிர வேறு சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள் இந்த தொகுதி மக்கள் என நம்பிக்கை தெரிவித்து பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது புன்னகரம் கிராமம். இந்த ஊர் வழியாக டிப்பர் லாரிகளில் கற்களை ஏற்றி செல்கின்றனர். இந்நிலையில், இன்று கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று நிலைத்தடுமாறி ஸ்ரீ ராமப்பா என்பவரின் வீட்டின் மீது மோதியதில் வீடு தரை மட்டமாகியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து பேரிகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த இடங்களில் தேர்தல் தொடர்பான செலவின புகார்களை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர் வருண்சோனியின் கைபேசி எண்ணில் 9363981394 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் கிடந்த பார்சலில் இருந்து 5 செல்போன்கள், குட்கா, பீடி உள்ளிட்டவற்றை காவலர்கள் நேற்று கைப்பற்றினர். காலாப்பட்டு மத்திய சிறைக்கு பார்சல் வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதுச்சேரி மத்திய சிறைக்கு வீசப்பட்ட 5 செல்போன்கள், வைஃபை மோடம், பீடி, குட்கா பார்சலை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.