India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாதவன் நாயர் காலனியை சேர்ந்தவர் மீனவர் முனியசாமி. இவர் கடந்த 28ஆம் தேதி இரவு திரேஸ்புரம் கடற்கரையில் மதுபோதையில் இருந்த தனது நண்பர்கள் தமிழ்ச்செல்வன், முனீஸ்வரனை தட்டி கேட்டுள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த இருவர் முனியசாமி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். வடபாகம் போலீசார் நேற்று இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் சீரடி ஸ்ரீ சர்வசக்தி சாய்பாபா ஆலயத்தில் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, மதியம் 3 மணியளவில் சத்திய நாராயண பூஜை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜைகளில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக உள்ள வக்கணம்பட்டி, பால்னாங்குப்பம், ஜோலார்பேட்டை, இடையம்பட்டி, பொன்னேரி உள்ளிட்ட வாக்குச்சாவடிகள் இன்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் காவல்துறை அதிகாரிகள் இருந்தனர்.
மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் ஆங்கிலத்துறையில் 33 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நல்லமலை பேராசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை
ரூ.1,834 கோடி அபராதம் விதித்ததை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே இன்று காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி பாஜக அமைச்சர் சாய் சரவணன் குமார், கடந்த 10 ஆண்டுகளில் பாரத பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார். மேலும் இந்தியா முழுவதும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக 543 தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் உருவாக்குவார் என்று தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் R.M காலணியில் உள்ள (WANTS SKILL SKY SCHOOL) இலவச தையல் பயிற்சிக்கு விண்ணப்பித்த பெண்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இலவச தையல் பயிற்சிக்கு விண்ணப்பித்த பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் தையல் பயிற்சியில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் தங்களது செலவீன கணக்குகளை சமர்ப்பித்தல் தொடர்பான விளக்கக் கூட்டம் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில், மதுரை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர்கள் ராணி லாமா, மதுமிதா தாஸ் முன்னிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கோவையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு மறுபரிசீலனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச்.30) கட்சி வேட்பாளர்களுக்கான சின்னங்களும் சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு தாமரை, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை புரூக் பீல்டு வர்த்தக வளாகத்தில் இன்று (மார்ச்.30) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி மகளிர்கள் 100க்கும் மேற்பட்ட கோலம் வரையப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு மகளிர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.