Tamilnadu

News March 31, 2024

ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம்

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியின் சார்பில் சுயேட்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வரும் 4-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரத்தில் வாகன பிரச்சாரம் செய்கிறார். ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் தொடங்கி அரண்மனை வரையுள்ள இடங்களில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News March 31, 2024

திருச்சி: அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்குபதிவு

image

திருச்சி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து நேற்று இரவு திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக அமைப்பு செயலாளர் சாருபால தொண்டைமான், பாஜக உறுப்பினர் காளீஸ்வரன் உட்பட 700 பேர் மீது தில்லைநகர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 31, 2024

தூத்துக்குடியில் தேர்வில் மாற்றம்

image

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.10 அன்று நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22.4.2024 அன்றும், 12.4.2024 அன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.4.2024 அன்றும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இதனால் கோடை விடுமுறை தள்ளிப்போவதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

News March 31, 2024

தேனி அருகே கொடூர கொலை

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (மார்.29) நந்தினி வீட்டுக்கு சதீஸ்குமார் சென்ற போது பிரபாகரன் என்பவருடன் நந்தினி இருந்துள்ளார். இதுகுறித்து வாக்குவாதம் ஏற்படவே இருவரும் சதீஷ்குமாரை குத்தியதில் அவர் உயிரிழந்தார். கொலை செய்த இருவரையும் போலீசார் நேற்று (மார்30) கைது செய்தனர்.

News March 31, 2024

மாநில அளவில் முதலிடம் பிடித்த பெண்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வினை சுமார் 6 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தேர்வு காண முடிவு கடந்த 28 ஆம் தேதி வெளியானது. இதில் விஜயமங்கலம் அருகே உள்ள மச்சான்பாளையமத்தை சார்ந்த மது பிரியா 600 க்கு 587.25 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

News March 31, 2024

கடலூரில் 19 வேட்பாளர்கள்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடலூர் தொகுதியில் கடந்த 27ஆம் தேதியுடன் முடிந்த வேட்புமனு தாக்கலில் 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 5, சுயேட்சைகள் 11 பேர் என தேர்தல் களத்தில் 19 வேட்பாளர்கள் உள்ளனர் என கடலூர் ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

News March 31, 2024

திருவாரூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

image

திருவாரூர், கொல்லுமாங்குடி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாகை வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார். இந்நிலையில் அதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்பணியினை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News March 31, 2024

சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

image

மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சங்கீதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவரிமான், விராட்டிபத்து, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News March 31, 2024

ஆரணி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

image

ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் (57) இவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தி அடைந்த செல்லம்மாள் கடந்த 28 ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 31, 2024

திருப்பத்தூர் அருகே அரிவாள் வெட்டு

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் இரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (58). சொத்து பிரச்சினை காரணமாக முருகேசனை அவரது சித்தப்பா பேரன் மது மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து நேற்று அரிவாளால் வெட்டினர். இதில் தலை, முழங்கையில் பலத்த காயமடைந்த அவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!