Tamilnadu

News April 1, 2024

தஞ்சை அருகே தீ விபத்து; மரணம் 

image

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அருகே குருங்களூரைச் சோ்ந்தவா் மாணிக்கவாசகம் (59). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்.இவா் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து பசு மாடுகள் வளா்த்து வருகிறாா்.இக்கொட்டகையிலும் , அருகிலிருந்த வைக்கோல் கட்டுகளிலும் நேற்று அதிகாலை தீ பற்றி எரிந்தது.தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா்.இந்த விபத்தில் ஒரு பசு மாடு உயிரிழந்தது.

News April 1, 2024

மதுரை, உள் நோயாளிகளுக்கு தபால் வாக்கு வழங்க கோரிக்கை

image

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் சி. எம். செய்யதுபாபு , மதுரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான, ஆட்சியர் சங்கீதாவுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “100 சதவீதம் வாக்குப்பதிவை நிறைவேற்றும் வகையில், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும் தபால் வாக்குரிமை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

News April 1, 2024

‘கச்சத்தீவை தாரைவார்த்த இந்திரா, கருணாநிதி’

image

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொங்கலூர் ஒன்றிய பகுதியில் பல்வேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கே.அண்ணாமலை பேசுகையில், கச்சத்தீவை தாரைவார்த்ததன் மூலம் நாட்டுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் துரோகம் செய்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.

News April 1, 2024

3 மாதமாக முடங்கிய தானியங்கி வானிலை ஆய்வு மையம்

image

இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வானிலை ஆய்வு மையம் மழை, வெள்ளம், வெயில் போன்ற பருவநிலைகளை கணிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த டிச. மாத மழை வெள்ளத்துக்கு பின்னர் இந்த வானிலை ஆய்வு மையம் செயல்படவில்லை என நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார். மத்திய அரசின் வானிலை ஆய்வு மைய அலுவலர்கள் இதை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

News April 1, 2024

முதுமலை யானைகள் முகாமில் கவர்னர் ரவி

image

நீலகிரிக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று (மார்ச் 31) மாலை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு குடும்பத்துடன் சென்றார். யானைகளுக்கு உணவு அளித்தார். பின்னர் யானைகள் பராமரிப்பு குறித்து ஆஸ்கர் விருது பெற்ற பாகன் பொம்மன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார். முன்னதாக வனத்துறை வாகனத்தில் காட்டுக்குள் சவாரி சென்றார்.

News April 1, 2024

திண்டுக்கல்: 100 அடி பள்ளம்: பதைபதைக்கும் சம்பவம்

image

கொடைக்கான‌ல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்திற்கு சென்ற‌ தூத்துக்குடி இளைஞ‌ர் ஒருவ‌ர் பாறை பகுதியில் இருந்து சுற்றுலா தலத்தை எட்டிப்பார்த்த போது 100 அடி பள்ளத்தில் கால் தவறி விழுந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 100 அடி பள்ளத்தில் இறங்கி படுகாயங்களுடன் வலியில் தவித்து வந்த தன்ராஜ் (22) என்ற இளைஞரை உயிருட‌ன் மீட்டு மேலே அழைத்து வந்தனர்.

News April 1, 2024

தண்ணீரை விலைக்கு வாங்கி செடிகளுக்கு ஊற்றும் விவசாயிகள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில மாதங்களாக அந்த பகுதிகளில் மழை பொய்த்ததால், தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மா மரங்கள் காய்ந்து வருவதால் மா செடிகளை காக்க ஜெகநாதபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி, டிராக்டர் மூலம் கொண்டு வந்து மா செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி வருகின்றனா்.

News April 1, 2024

பாலாற்றில் பண்டைய கால நாணயங்கள்  கண்டெடுப்பு

image

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் ஆய்வுசெய்த போது ராஜராஜ சோழன் காலத்தில் பயன்பாட்டில் இருந்த வட்ட வடிவ செப்பு நாணயம் கிடைத்துள்ளது.
தங்க நாணயத்தில் பொறிக்கப்பட்டிருந்த அதே முத்திரை அமைப்புடன் உள்ளது. நாணயத்தின் முன்புறம் மன்னர் நின்றவாறும், பின்புறம் அமர்ந்தவாறும் உள்ளார்.
உலோக நாணயத்தில், முன்புறம் துதிக்கை துாக்கி பிளிறும் யானை, பின்புறம் உஜ்ஜயினி ஸ்ரீவத்சம் எழுத்து சின்னம் உள்ளது.

News April 1, 2024

பழனிச்சாமியின் ஊழல் குடுமி பா.ஜ.க கையில்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் ஈரோடு, நாமக்கல்,கரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது மோடி தேர்தல் பயத்தில் சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளார். ஊழல் ஆட்சி நடத்தி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் ஊருக்கு உபதேசம் செய்யலாமா?. பழனிச்சாமியின் ஊழல் குடுமி பா.ஜ.க கையில் உள்ளது. அதிமுக வின் ஊழல் கன்னித்தீவு கதை என பேசினார்.

News April 1, 2024

நீலகிரி: சுற்றுலா தலங்களில் தடை விதிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் இன்று (ஏப்ரல் 1) முதல் ஜூன் மாதம் இறுதி வரை 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!