Tamilnadu

News April 1, 2024

நெல்லை: இன்று முகாமிடும் அரசியல் விஐபிகள்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பல்வேறு கட்சி விஐபிகள் இன்று முகாமிட்டுள்ளனர். டிடிவி தினகரன் இன்று (ஏப்ரல் 1) மாலை தாழையூத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திமுக வாகை சந்திரசேகர் அம்பை பகுதியில், தங்கபாலு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் முக்கூடல் பகுதியிலும், கனிமொழி வள்ளியூர் பகுதியிலும் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.

News April 1, 2024

தர்மபுரி உழவர் சந்தையில் தீவிர வாக்கு சேகரிப்பு

image

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தையில் திமுக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் மணியை ஆதரித்து உழவர் சந்தையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News April 1, 2024

குமரியில் ஆலோசனை கூட்டம்

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக பசிலியான் நசரேத் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்காக குமரி மாவட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் அதிமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாநகர வடக்கு மண்டல செயலாளர் மாநகராட்சி உறுப்பினர் ஸ்ரீலிஜா தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

News April 1, 2024

ரூ.1கோடி மோசடி மூன்று பேர் மீது வழக்கு

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவிக்னேஷ். இவர் தேனி எஸ்.பி இடம் தனது தங்கை மற்றும் அவரது உறவினர்கள் 8 பேரிடம் பள்ளிக் கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கனகதுா்கா, சூா்யா, சரண்யா ஆகியோர் மொத்தம் ரூ.1,11,21,000 பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்ததாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும் நேற்று (மார்.31) போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 1, 2024

சென்னை வானிலை மையம் அறிக்கை

image

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் சென்னையில் வறண்ட வானிலையே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி , குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

News April 1, 2024

விருதுநகர் அருகே தீ விபத்து; நாசம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே பீடர் சாலையில் ராமநாதபுரம் மாவட்ட சர்வோதய சங்க கட்டிடத்தில் இலவம் பஞ்சு மெத்தை, பர்னிச்சர் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சர்வோதய சங்கங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், இன்று இங்குள்ள இலவம் பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

News April 1, 2024

புதுக்கோட்டையில் 11 பேர் கைது

image

புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது மச்சுவாடி பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து கும்பலாக சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரத்து 500 சீட்டுக்கட்டுகள் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது

News April 1, 2024

தென்காசி:வெடிகுண்டு தயாரித்த 4 பேர் கைது.

image

வீராணம் சாலையில் சார்பு ஆய்வாளர் கௌசல்யா தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.அப்போது சுரேஷ் என்பவரை பிடித்து அவரது இருசக்கர வாகனத்தை சோதனைசெய்தபோது வெடிகுண்டு வைத்திருந்தது தொடர்பாக விசாரணை நடத்தி மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் வீராணம் சுரேஷ்(34),கார்த்திக்(25)மனோசங்கர் (19) மற்றும் சுரண்டை நாகராஜா (35) ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்து,கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

News April 1, 2024

பா.ம.க. சின்னம் வரையப்பட்ட சுவர் உடைப்பு

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க.வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து கட்சியினர் ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் மாம்பழ சின்னத்திற்கு ஆதரவு கேட்டு விளம்பரம் வரைந்திருந்தனர் . இந்த சுவரை நேற்று மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் திடீர் பதற்றம் ஏற்பட்டது.இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

திரும்ப பெறப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வு

image

தாமினாட்டில் கல்லக்குடி உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மார்ச் 23ஆம் தேதி அறிவித்தது. அதன்படி இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!