Tamilnadu

News April 1, 2024

பெரம்பலூர் வரும் பிரதமர் மோடி..?

image

டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்த போது, பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும் பெரம்பலூர் மக்களின் கனவு திட்டமான பெரம்பலூர் ரயில் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

News April 1, 2024

ஈரோடு: பாஜக வேட்பாளர் மீது வழக்கு

image

திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தம் தற்காலிக தேர்தல் கட்சி அலுவலகத்தை அனுமதி பெற்ற தேதிக்கு முன்பாக திறந்து வைத்ததாக தேர்தல் அதிகாரி பூபாலன் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து பாஜக வேட்பாளர் முருகானந்தம் மற்றும் தெய்வசிகாமணி ஆகியோர் மீது அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

News April 1, 2024

செங்கல்பட்டு: நரிக்குறவ பெண்களின் அவல நிலை

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லாவரம் கண்டோன்மெண்ட் பின்புறம் உள்ள நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்றும் அவற்றை செய்து தரக் கோரி 100 க்கும் மேற்பட்டோர் இன்று மனு அளிக்க வந்தனர்.  மாவட்ட ஆட்சியரை சந்திக்க இயலாத நிலையில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். 

News April 1, 2024

ஓட்டு போட கடிதம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

உதகை ஆர்.கே.புரம் பகுதியில்  நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு  மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அருணா , கூடுதல் ஆட்சியர் கெளசிக் ஆகியோர் சென்றனர் . பாராளுமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பெற்றோர்கள் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாணவ , மாணவியர்களிடம் மாவட்ட ஆட்சியர் அருணா கடிதங்களை வழங்கினார்கள்.

News April 1, 2024

தென்காசி தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்

image

தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் கமல் கிஷோர் விடுத்துள்ள அறிக்கை: தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பணம், பிற பொருட்கள் கையிருப்பில் வைத்திருக்கும் பொதுமக்கள், அதற்கான தகுந்த ஆதாரங்களை, சமர்ப்பித்தும் பணம் சோதனை அலுவலர்களால் கைப்பற்றபட்டால் 7305089505 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

News April 1, 2024

கிணற்றில் மூழ்கி இருவர் பலியான சோகம்

image

உசிலம்பட்டி அருகே சீமானத்து கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் (22), ஆனந்த் (38) ஆகிய இருவரும் இன்று கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளனர். பிரேம்குமாருக்கு நீச்சல் தெரியாத நிலையில் அவருக்கு ஆனந்த் நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது திடீரென பிரேம்குமார் நீரில் மூழ்கியதால் அவரை காப்பாற்ற முயன்றபோது ஆனந்தும் தண்ணீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உடலை மீட்டு போலீசார் விசாரணை.

News April 1, 2024

கோவையில் மாத இறுதியில் மழைக்கு வாய்ப்பு 

image

கோவையில் தற்போது வெயில் வெளுத்து வாங்குவதால், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் கோவையில் அடுத்த 10 முதல் 17 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் இல்லை என கோவை வெதர்மேன் சந்தோஷ் கூறியுள்ளார். மேலும், ஏப்ரல் இறுதி வாரத்தில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மே மாதம் தொடக்கத்தில் நல்ல மழை இருப்பதாக தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

News April 1, 2024

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

எலச்சிபாளையம் அருகே கொன்னையார் கிராமம், நல்லையன்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (43). எல்.ஐ.சி., முகவரான இவர் நேற்று இரவு 11 மணியளவில் பணியை முடித்துவிட்டு அவரது இருசக்கர வாகனத்தில் வையப்பமலையில் இருந்து கொன்னையார் நோக்கி வந்துள்ளார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 1, 2024

சீர்காழி பகுதியில் பணம் பறிமுதல்

image

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீர்காழி அடுத்த காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த மாமல்லன் என்பவர் அனுமதியின்றி எடுத்து வந்த ரூ. 65 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News April 1, 2024

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் அமல்

image

புதுவையில் நடப்பு கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது.சி.பி.எஸ்.இ.வழிகாட்டுதலின்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து என்.சி.ஆர்.டி.பாடபுத்தகம் வாங்கப்பட்டது.

error: Content is protected !!