India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினரால், மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இரண்டு சக்கர வாகனங்களை மார்ச் 21-ல் பொது ஏலம் நடைபெறும் என மாவட்ட காவல் துறை அறிவித்திருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், பொது ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கௌகாத்தி ரயில் நிலையத்தில் பெங்களூர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலைய நடைமேடை 1-ல் வந்து நின்றது. அப்போது இன்ஜினில் இருந்து 11-ஆவது பெட்டி சக்கரத்தின் அருகே உள்ள ஸ்பிரிங்கில் கிரீஸ் இல்லாததால் அதிக வெப்பமாகி உடைந்தது. இதனால் அந்த பெட்டியை கழட்டி விட்டுவிட்டு ரயில் பெங்களூர் நோக்கி சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர் .
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தமாக 32 மனுதாரர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது. இதில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமை வகித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் என்ற இடத்தில் கேரளாவில் இருந்து சென்னைக்கு டாரஸ் லாரியில் மரபிளைவுட் ஏற்றிச் சென்ற லாரி இன்று (மார்ச்-20) திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுனர் மற்றும் தீயணைப்பு துறையினர் வாகனத்தின் தீயை அணைத்ததால் பல லட்சம் மதிப்புடைய மர பிளைவுடுகள் தப்பின. இதுகுறித்து படாளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புதிதாக துணை கண்காணிப்பாராக சூரக்குமரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பெரியகுளம், தென்கரை, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போடு காவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட காமைன்புரம் கிராமத்தில், விவசாயி துரைசாமி என்பவரின் தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றைக் காட்டு யானை சேதப்படுத்தி உள்ளது. இதில் டிராக்டர் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து ஜீர்கள்ளி வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரம் திமுக சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடலூரில் 05/04/2024 (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் செய்ய உள்ளார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிட உள்ளார். இதனையடுத்து அவர் இன்று காலை (மார்ச் 20) முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விழுப்புரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் விசிக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
வரும் 2024-நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 22 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலும், நாகை, குமரியில் மார்ச்.23ஆம் தேதியும் நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் வரும் 26 ஆம் தேதியும் தேர்தல் பரப்புரை மேற்க்கொள்ளப் போகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல்19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை மேற்கொள்ளவுள்ள தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மார்ச் 23ம் தேதி தஞ்சையில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
Sorry, no posts matched your criteria.