Tamilnadu

News April 1, 2024

தஞ்சாவூர் அருகே வழிப்பறி

image

தஞ்சாவூர்: ஆடுதுறை பகுதியை சேர்ந்த மணிபாரதி என்பவர் வேலையை முடித்துக்கொண்டு தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென வந்த 4 பேர் அவரை சுற்றி வளைத்து தாக்கி அவரிடமிருந்த பணம், மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக அப்துல்ரஹீம் (19), வருண் ( 20) சதீஷ் ( 19),முகமது ரோஷன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News April 1, 2024

ராமநாதபுரம் அருகே மது அருந்திய தொழிலாளி சாவு!

image

ராமநாதபுரம் மாவட்டம் காரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் மகன் பாண்டி (45), இவர் ராமநாதபுரத்தில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு மது அருந்தி விட்டு குடி போதையில் நயினார் கோயில் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே படுத்து தூங்கி உள்ள நிலையில் இறந்துள்ளார். அவரது மனைவி கிருஷ்ணவேணி புகாரில் உடலை கைப்பற்றி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 1, 2024

நெல்லைக்கு நாளை வரும் காயத்ரி ரகுராம்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். அவர் தற்பொழுது தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் வேட்பாளரை ஆதரித்து அதிமுக பேச்சாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் நாளை (ஏப்.2) மாலை 6:00 மணியளவில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு பிரச்சார மேற்கொள்ள உள்ளார். இதில் அதிமுகவினர், கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

News April 1, 2024

காஞ்சிபுரம்: சரக்குக்கு 500, சைடு டிஷ்ஷுக்கு 500

image

காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வளர்மதி காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய மாஜி அமைச்சர் வளர்மதி தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை, பாதி டாஸ்மாக்கிற்கும், மீதி சைடு டிஷ்ஷுக்கும் தான் போகிறது”என இன்று விமர்சித்துள்ளார்.

News April 1, 2024

திருவாரூரில் மழை! வந்தாச்சு அப்டேட்

image

திருவாரூரில் தற்போது வெயில் வெளுத்து வாங்குவதால், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான வழை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News April 1, 2024

திண்டுக்கல்: 20 அடி நீள வேலுடன் வந்த பக்தர்

image

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணுப்படுகிறது. தொடர்ந்து காவடி மற்றும் வேல்களை தாங்கி வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் காங்கேயத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 20 அடி நீள அலகு குத்தி வந்ததால் பரபரப்பு நிலவியது.

News April 1, 2024

சக கைதியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு

image

புழல் மத்திய விசாரணை சிறையில், கஞ்சா வழக்கில் கைதான எண்ணூரை சேர்ந்த கார்த்திக் 23 ராஜேந்திரன் 31 அயனாவரம் லோகு 23 ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மதியம் இவரது செருப்பு காணாமல் போனதால் மற்றொரு கைதியான அமைந்த கரையை சேர்ந்த முகமது அமான் 43 என்பவர் திருடியதாக கூறி மூவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் முகமது அம்மானை தாக்கிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 1, 2024

குமாரி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த நடிகர்

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் பசலியான் நசரேத் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக குமரி மாவட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் ராமன் புதூர் மீன் சந்தை பகுதியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் நடிகர் சிங்கமுத்து இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News April 1, 2024

தூத்துக்குடி: கனிமொழி வாகனம் திடீர் சோதனை

image

மக்களவை தேர்தலை ஒட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்திற்காக நெல்லை சென்றபோது மூன்றாவது மைல் அருகே அவரது வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News April 1, 2024

அரியலூர்: சட்டவிரோதமாக சிலிண்டர் விற்பனை

image

அரியலூர், ஆண்டிமடம் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விளந்தை கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் அரசின் மானிய விலை சிலிண்டரில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு பயன்படும் பெரிய சிலிண்டர்களுக்கு சமையல் எரிவாயுவை நிரப்பி அப்பகுதியிலுள்ள கடைகள், மண்டபங்களுக்கு விற்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்.

error: Content is protected !!