Tamilnadu

News April 2, 2024

கணினி மூலம் பணி ஒதுக்கீடு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில்  வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் 2 ஆம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணி குறித்து  ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ் கலந்து கொண்டார்.

News April 2, 2024

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகளால் மொத்தம் 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1,91,67,955 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் 52 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு ரூ. 1,44,91,265 ரொக்கம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 21,50,82,357 மதிப்பிலான தங்க நகைகளும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 2, 2024

புதுக்கோட்டை அருகே புனித செபஸ்தியார் தேர்த் திருவிழா!

image

கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர்த் திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேர்த் திருவிழா ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் 5 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழாவின் தொடக்கமாக திருச்சிலுவை கொடியானது ஆலயத்தை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக இசை முழக்கத்துடன் எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று இரவு தேர்ப்பவனி நடைபெறுகிறது.

News April 2, 2024

மயிலாடுதுறை:பாதிக்கப்பட்ட நபருக்கு நிவாரண நிதி வழங்கல்

image

சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் பாதிக்கப்பட்ட கரிகாலன் என்பவருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் ரூ. 50,000 நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிதி உதவியினை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா இன்று பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

News April 2, 2024

விழுப்புரத்தில் பரவும் வைரல் செய்தி

image

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு வெளியாகும். இதற்கிடையில் 19ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கும் வாக்குப்பதிவு நாள் அது தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பிறந்தநாள் என்றும், வாக்கு எண்ணப்படும் நாளான ஜூன் 4ஆம் தேதி அனில் அம்பானியின் பிறந்தநாள் என்றும் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News April 2, 2024

தி.மு.க வேட்பாளரின் வாகனத்தை  சோதனையிட்ட பறக்கும் படையினர்

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி களம்பூர் பேரூராட்சியில் வாக்கு சேகரித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் M.S.தரணிவேந்தனின் வாகனத்தை நேற்று(ஏப்.1)தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

News April 2, 2024

சென்னை:மீன் வியாபாரியிடம் பணம் பறிமுதல்!

image

காசிமேடு மீன் மார்க்கெட் பகுதியில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த அதிகாரி தமிழரசன் போலீசார் உடன் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டை சேர்ந்த குமார் என்பவர் மீன் வியாபாரத்திற்காக மீன் வாங்க ரூபாய் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணம் கொண்டு வந்துள்ளார்.பணத்துக்கான எந்த ஆவணமும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்திற்கு அனுப்பி உள்ளனர்.

News April 2, 2024

கடலூர்:சிறப்புரையாற்றிய மாநகர செயலாளர்

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கடலூர் மாநகர செயலாளர் மு. செந்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 2, 2024

பொதுமக்கள் திடீர் சாலை ம‌றிய‌ல்

image

கொடைக்கானல் பிர‌காச‌புர‌ம் ப‌குதியில் சுமார் 500க்கும் மேற்ப‌ட்ட குடும்பத்தின‌ர் வசித்து வ‌ருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகிய‌தாக உள்ளது.இந்த‌ சாலையை ஆக்கிர‌மித்து தனி நபர் ஒருவ‌ர் தடுப்பு சுவ‌ர் க‌ட்டியதால் ஆத்திர‌ம‌டைந்த‌ இப்ப‌குதியின‌ர் த‌டுப்புசுவ‌ரை அக‌ற்ற கோரி ந‌க‌ராட்சி குப்பைவ‌ண்டியை சிறைபிடித்து சாலை ம‌றிய‌லில் ஈடுபட்டனர்.

News April 2, 2024

ராம்நாடு: பிரச்சார அலுவலகம் திறந்து வைத்த வேட்பாளர்

image

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட புது மடத்தில் SDPI – அஇஅதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்று (ஏப்ரல் 1) திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயப்பெருமாள் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டார்.

error: Content is protected !!