India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை நகரத்திற்குட்பட்ட கீழ நாஞ்சில் நாடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட இளைஞரணி செயலாளர் நான்கில் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷை ஆதரித்து திருச்சி முழுவதும் அதன் நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நோட்டீஸ் வழங்குதல், திண்ணைப் பிரச்சாரம் ஆகியவற்றை கடந்து தற்போது வாட்ஸாப் மூலம் “ஸ்டாப் ABCD” அதிமுக, பிஜேபி, காங்கிரஸ், மற்றும் திமுக, வேறு எந்த கட்சிகளும் வேண்டாம் நாம் தமிழர் கட்சிக்கே உங்கள் ஆதரவு என்று பரப்பி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 2) நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார். புதுகை- திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் 100 % வாக்களிக்கும் வகையில் அன்றைய தினம் அனைத்து நிறுவனங்களும், தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று(ஏப்.3) காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்களில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக, இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை அருகே செம்மங்குளம் பகுதியில் இன்று (ஏப்.3) சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அங்குள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து சிறுத்தை குறித்து தகவல் தெரிந்தால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை காவல்துறை தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று (ஏப்.3) காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்களில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக, இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்று (தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர இருப்பதால் திருவண்ணாமலை முழுவதும் “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” (No Flying Zone) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
புதுவை இந்திரா காந்தி சிலை சதுக்க பகுதியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவா் செல்வகணபதி எம்.பி.நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்தத் தோ்தலில் நமச்சிவாயம் வென்றால் அவர் மத்திய அமைச்சராகும் வாய்ப்புள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்காக புதுவைக்கு வருகிறாா். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேதி விரைவில்அறிவிக்கப்படும்” என கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி தொகுதியில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் . இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் அரசியல் கட்சியினர் மீது இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து ,தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட வாகன சோதனையில், நேற்று வரை ,1 கோடியே 47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.