India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு : பாளை அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளம் மற்றும் சீவலப்பேரி ரோடு கக்கன் நகர் நீச்சல் குளங்களில் 5 பிரிவுகளாக 12 நாட்கள் வீதம் ஏப்ரல் மே மாதங்களில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.1770 . மேலும் விவரங்களுக்கு 74017 03506 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதியை சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அல்லது வேட்பாளரின் முகவர் ஆகியோர் தங்களது தேர்தல் வரவு செலவு கணக்கு ஒத்திசைவு கூட்டமானது இன்று (4ம் தேதி) நடைபெற உள்ளது. இதற்கு தேர்தல் செலவின பார்வையாளராக லட்சுமி நாராயணா முன்னிலை வகிக்க உள்ளார் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட லோக்சபா மற்றும் ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையம் உள்ளது. இங்கு 24 மணிநேரமும் தேர்தல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நேற்று கலெக்டர் அருண்ராஜ், தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் குன்னம் சட்டமன்ற தொகுதி, ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், காரை ஊராட்சியில், புதுக்குறிச்சி, மலையப்ப நகர், சமத்துவபுரம், காரை, ஆகிய கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து நேற்று (3.4.2024) பானை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜேஸ்வரன் என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் முரளி என்பவர் தோல்வியுற்றார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் எ.வ.வேலு நினைவுப் பரிசினை வழங்கினார். இதில், அமைச்சர் மஸ்தான், சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, டாக்டர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, அம்பேத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
கடந்த சில தினங்களாக கொடைக்கானல் ஏரிச்சாலை, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் ஆகிய பகுதிகளில் காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இந்த நிலையில் கொடைக்கானல் அருகேயுள்ள குறிஞ்சி நகா் பகுதியில் காட்டுமாடு ஒன்று நீருற்றுக்குள் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி மாட்டை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனா்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புது அத்திக்கோம்பை பகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கு விவசாய பணியில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். தன்னை எம்.பி. ஆக்கினார், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாக விவசாயம் மண்ணை எடுத்து பெண்கள்கையில் வைத்து சத்தியம் செய்தார்.
நீலகிரியில் தேர்தல் பரப்புரை செய்ய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (4.4.24) ஊட்டி வருகிறார். நாளை காலை ஊட்டி ஏடிசி திடலில் அதிமுக சார்பாக நடக்கும் பொது கூட்டத்தில் வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை அறிமுகம் செய்து வைக்கிறார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலர் வினோத், சாந்தி ராமன் ((Ex. MLA) உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.