Tamilnadu

News April 5, 2024

தஞ்சாவூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

image

இந்திய தேர்தல் ஆணையம், இந்திய அஞ்சல் துறை ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர்  அறிவுறுத்தலின் படி தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் 100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணி தலைமை தபால் நிலையம் முன்பு இன்று 5.4.24 உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி விஷ்ணு பிரியா துவக்கி வைத்தார். அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

News April 5, 2024

துவங்கியது தபால் வாக்குப்பதிவு!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் தலைமையில் 80 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று தபால் வாக்குப்பதிவு நடத்தி வருகின்றனர். முன்னதாக கணக்கெடுக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் தபால் வாக்குப்பதிவை பெற்று வருகின்றனர்.

News April 5, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆட்சியர் ஆய்வு

image

சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சேலம் சங்கர் நகர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இன்று மேற்கொண்டார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், சேலம் வட்டாட்சியர் தாமோதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News April 5, 2024

வீடுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

image

தென்காசி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்றும், இன்றும் சிவகிரி வட்டார உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சிகளின் வீடு வீடாகச் சென்று தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குவது மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

News April 5, 2024

புதுவைக்கு தமிழக முதல்வர் வருகை

image

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி அன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

News April 5, 2024

100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு 

image

மக்களவைத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா, தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் முன்னிலையில் இன்று (5.4.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை 20 லிட்டர் குடிநீர் கேன்களில் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

News April 5, 2024

ஈரோடு: 40 ஆயிரம் பேலட் பேப்பர் அச்சடிக்கும் பணி தீவிரம்

image

வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தெரியும்படி முன் பகுதியில் வேட்பாளர் பெயர் சின்னங்களுடன் கூடிய பேலட் பேப்பர் பார்வைக்கு வைக்க வேண்டி உள்ளதால், 40 ஆயிரம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50 சதவீதம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டதாகவும், முழுமையாக அச்சடிக்கப்பட்ட பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தொடங்கும் என தெரிவித்தனர்.

News April 5, 2024

கோவை: மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு

image

கோவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரியில் நடைபெற உள்ளது. அங்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆட்சியர் (ப) ஆசிக் அலி, துணை ஆணையர் சிவகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News April 5, 2024

ஆம்பூரில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேட்டி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள கதிர் ஆனந்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்ய வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடி அரசை மீறியவர்கள் நலனில் பாஜகவுக்கு ஒரு துரும்பு கூட அக்கறை இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.

News April 5, 2024

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

image

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர், 100% வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சார்பில் மனித சங்கிலி நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாநகராட்சி ஆணையர் உட்பட பலர் பங்கேற்று மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.

error: Content is protected !!