India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை: காரமடை தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் பிரதமர் மோடி வரும் 10ஆம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து எஸ்.பி பத்ரி நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில், தென்திருப்பதி நால்ரோட்டை சுற்றி 5 கி.மீ சுற்றளவிற்கு பிரதமர் வரும் வழித்தடத்தில் வரும் 9, 10ஆம் தேதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் முழுக்க முழுக்க ஒரு ஓட்டுச்சாவடி பசுமை ஓட்டுச்சாவடியாக செயல்பட உள்ளது. இந்த பசுமை ஓட்டுச்சாவடி புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள 138 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹெரிட்டேஜ் கட்டிடமான வ.உ.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட உள்ளது. ஓட்டுச்சாவடி வாயிலில் வாழை மரங்கள், இளநீர் கட்டப்பட்டு, பச்சை மா, தென்னங்கீற்று பந்தல், தோரணங்கள் கட்டப்படுகிறது.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.பாபு கும்பகோணம் மேற்கு ஒன்றியம் பகுதியில் நேற்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கடை வீதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேட்பாளர் பி.பாபு தானே பஜ்ஜி சுட்டுக்கொடுத்து கடைக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகுடீஸ்வரனை தேடி வருகின்றனர். உடனடியாக மகுடீஸ்வரன் பொறுப்பிலிருந்து இருந்து நீக்கி மாவட்ட தலைவர் கனகராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க மாநில தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
தென்காசி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணசாமி இன்று புளியரை காவல் சோதனை சாவடி அருகில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வள கனரக லாரிகளின் அணி வகுப்பை பார்வையிட்டார். அப்போது, அவருடன் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர். கிருஷ்ணசாமியை இயற்கை வள பாதுகாப்பு சங்க செயலர் ஜமீன் சந்தித்தார்.
தாளவாடி அருகே பாரதிபுரம் கிராமத்தில் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் இன்று பலத்த சூறைக்காற்று வீசியது. இதில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள், உரிய நிவாரணம் வழங்க கோரி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில் பக்கவாட்டு சுவரில் நீர் கசிந்து வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தாம்பரம் – கிழக்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் இந்த பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் பக்கவாட்டு சுவரில் இருந்து நீர் கசிந்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்.19ம் தேதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் பணம் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜூன் 4ம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டமானது ஆறு மற்றும் ஓடை ஓரங்களில் குறிப்பாக மஞ்சளாறு , மகிமலையாறு , பழைய காவேரி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோமல், காஞ்சிவாய் பகுதியில் சிறுத்தையை நேரில் பார்த்ததாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் சிறுத்தையின் அடையாளம் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தல்குடியை சேர்ந்தவர் பீட்டர் ஆரோக்கியசாமி. இந்நிலையில் பீட்டர் ஆரோக்கியசாமி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றபோது, திடீரென அவரது வீட்டில் தீ பற்றி எரிந்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்புத் துறை விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டிலிருந்த மின் சாதன பொருட்கள் ஆவணங்கள் எரிந்து நாசம் ஆகியது. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா? என போலீசார் இன்று விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.