Tamilnadu

News April 9, 2024

நெல்லையப்பர் கோவிலில் திரண்ட மக்கள்

image

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இன்று (ஏப். 9) தெலுங்கு பேசும் மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். தெலுங்கு பேசும் மக்களின் வருட பிறப்பு நாளான யுகாதி திருநாளை முன்னிட்டு இன்று நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது அதிகாலை முதலே ஏராளமான தெலுங்கர்கள் திரண்டு சுவாமி வந்து தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் தெலுங்கு வருட பிறப்பு தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

News April 9, 2024

கடலூரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

கடலூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பாக்கி உடனே வழங்க வேண்டும், எங்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலாளர் சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.

News April 9, 2024

தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு

image

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவல் அலுவலர்களாக  பணியில் பங்கேற்கும் முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் விருப்ப மனுக்களை வழங்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மணிவண்ணன் இன்று (ஏப்ரல் 9) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 9, 2024

கடலூரில் மாநில செயலாளர் பிரச்சாரம்

image

மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.இதில் எம்எல்ஏ ஐயப்பன் மாநகர மேயர் சுந்தரி ராஜா திமுக மாநகர செயலாளர் ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் துறை மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசை அவர் கடுமையாக சாடினார்.

News April 9, 2024

குமரி: போதை கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி

image

குமரி, தக்கலை அருகே உள்ள வண்டாவிளையை சேர்ந்தவர் ஹரிதாஸ்(58), கொத்தனார். இவரது மனைவி லதா(48). ஹரிதாஸ் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றும்(ஏப்.8) ஹரிதாஸ் பிரச்னை செய்யவே, ஆத்திரமடைந்த லதா வெந்நீரை அவர் மீது ஊற்றியுள்ளார். இதில் காயமடைந்த ஹரிதாஸ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தக்கலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 9, 2024

திருச்சி: ரங்கோலி கோலம் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு

image

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சி ரயில் நிலையத்தில் அஞ்சலக ஊழியர்களால் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சி தலைவருமான பிரதீப் குமார் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த ரங்கோலி கோலத்தில் “என் வாக்கு என் உரிமை வாக்களிப்போம்”என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது.

News April 9, 2024

தென்காசியில் நோன்பு பெருநாள் தர்மம் 

image

தென்காசி நகர தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக நேற்று தென்காசி தமுமுக அலுவலகத்தில் வைத்து 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நோன்பு பெருநாள் தர்மம் தென்காசி நகர தலைவர் அபாபில் மைதீன் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆதம்பின் ஆசிக் களஞ்சியம்பீர் , சாகுல்ஹமீது, ஜாபர்சரிப் முஸவ்வீர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 9, 2024

புதுகை: வாக்குச்சாவடி அலுவலா்கள் அஞ்சல் வாக்களிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலின்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஆகிய பணிகளில் பங்கேற்கும் அரசு ஆசிரியா்கள் தங்களின் அஞ்சல் வாக்குகளை ஞாயிற்றுக்கிழமை செலுத்தினா். அலுவலா்களுக்கான முதல் கட்ட தேர்தல் பணிப் பயிற்சி ராணியார் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

News April 9, 2024

தேர்தல் புறக்கணிப்பு பேனரால் பரபரப்பு

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஒத்தப்பட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பலாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தது. தனி நபர் ஒருவரால் உயர்நீதிமன்றத்தில் வழக்கின் அடிப்படையில் முற்றிலும் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி பேனர் வைத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 9, 2024

சென்னை-நெல்லை கோடை விடுமுறை சிறப்பு ரயில்

image

கோடை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூர் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நெல்லை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும் என மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!