Tamilnadu

News April 17, 2024

வேலூர் எம்பி வேட்பாளர் உள்ளிட்ட 400 பேர் மீது வழக்கு பதிவு

image

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் , புதிய நிதி கட்சியின் நிறுவன தலைவருமான ஏ.சி. சண்முகம் இன்று (ஏப்ரல் 17) இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது உரிய அனுமதியின்றி பைக் பேரணி நடத்தியதால் வேட்பாளர் உள்பட 400 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 17, 2024

கொடைக்கானல் குறித்த முக்கிய அறிவிப்பு

image

ஏப்.19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களான மோயர்பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணாகுகை, பில்லர் ராக் ஆகிய பகுதிகள் பிற்பகல் 12.00 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மூடப்படும்; மேலும் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி இல்லை என கொடைக்கானல் வனத்துறை அறிவித்துள்ளது.

News April 17, 2024

திருச்சி: ஆட்சியரகத்தில் இறுதி குலுக்கல்.!

image

திருச்சி தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் ஆகியோரின் தலைமையில், இன்று அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான இறுதி குலுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

News April 17, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகள்

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமானவை என 188 வாக்குச்சாவடிகள் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளன இந்நிலையில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 148 தேர்தல் நுண் பார்வையாளர்களும் கூடுதலாக 26 தேர்தல் நுண் பார்வையாளர்களும் என மொத்தம் 174 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

விருதுநகர்: ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் இன்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இளம் தலைமுறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது‌ இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் யாரிடமும் பணம் & பரிசு‌ பெறாமல் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பேசி விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.‌ இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News April 17, 2024

தென்காசி: தங்கும் விடுதியில் கலெக்டர் ஆய்வு

image

தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், எஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் உத்தரவு படி மாவட்டம் முழுவதும் தங்கும் விடுதிகளில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

News April 17, 2024

மயிலாடுதுறையில் பாதுகாப்பு பணியிடம் ஒதுக்கீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணியிடம் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

News April 17, 2024

மயிலாடுதுறையில் தீவிர சோதனை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி யாரேனும் செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்க வாகன சோதனை மற்றும் தங்கும் விடுதிகள் , திருமண மண்டபம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.

News April 17, 2024

கடலூரில் ரூ.9.50 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை

image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 17, 18, 19-ந்தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இதனால் 3 நாட்கள் கடைகள் திறக்கப்படாது என்பதால், நேற்று கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் போட்டி போட்டு மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் ரூ.9.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.

News April 17, 2024

பழனியில் கண்காணிப்பு பணியில் போலீசார்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வந்த பரப்புரை இன்று(17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக இன்றுடன் பரப்புரை நிறைவடைந்திருக்கிறது. இதனையடுத்து பழனியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!