Tamilnadu

News April 18, 2024

திருச்சி அருகே பயங்கர விபத்து; தலை நசுங்கி பலி

image

திட்டக்குடியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மற்றும் நிவேதிதா ஆகிய இருவரும் நேற்று டூவீலரில் கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது கூத்தூர் மேம்பாலம் அருகில் வந்தபோது இடது புறத்தில் உள்ள பாலக்கட்டையில் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் வலது புறத்தில் சென்ற தனியார் பேருந்தில் அடிபட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

News April 18, 2024

ராமநாதபுரம்: 40 மதுபாட்டில்கள் பறிமுதல்

image

ராமநாதபுரம் கேணிக்கரை சப் இன்ஸ்பெக்டர் சபிதா ஸ்ரீ தலைமையிலான போலீசார் பேராவூர் பகுதியில் ரோந்து சென்றபோது அப்பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த கவரங்குளம் கொத்தன் மகன் கந்தசாமி (47), என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 18, 2024

இதுவரை ரூ.2.62 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்

image

பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் தேர்தலில் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பதற்காக பறக்கும் படையினர், வருமானவரித் துறையினர் போன்ற குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதுவரை ரூ.2.62 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்களையும், மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேற்கண்ட தகவல் இன்று (ஏப்.18) காலை தெரிவிக்கப்பட்டது.

News April 18, 2024

நம்ம காஞ்சி: இது நம்ம ஏரியா

image

கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம், 2009-ல் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. 15-வது மக்களவைத் தேர்தலை காஞ்சிபுரம் சந்தித்த முதல் தேர்தலாகும். இம்மக்களவைத் தொகுதியில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 17,32,946 ஆகும்.

News April 18, 2024

தருமபுரியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

image

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.

News April 18, 2024

தஞ்சாவூர்: 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்

image

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.

News April 18, 2024

தொழிலக பாதுகாப்பு அதிகாரி முக்கிய அறிவிப்பு

image

கடலூரில் தொழிலாளர்களுக்கு நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஓட்டளிக்க ஏதுவாக நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை உள்ள தொகுதியில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று ஓட்டளிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

News April 18, 2024

ராணிப்பேட்டை: வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு

image

அரக்கோணம் மக்களவைத் தேர்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிய உள்ள அலுவலர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்வு நேற்று(ஏப்.17) நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

News April 18, 2024

திருச்சி அருகே பயங்கர விபத்து; தலை நசுங்கி பலி

image

திட்டக்குடியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மற்றும் நிவேதிதா ஆகிய இருவரும் நேற்று டூவீலரில் கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது கூத்தூர் மேம்பாலம் அருகில் வந்தபோது இடது புறத்தில் உள்ள பாலக்கட்டையில் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் வலது புறத்தில் சென்ற தனியார் பேருந்தில் அடிபட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

News April 18, 2024

சென்னை: மருதாணி வைத்திருந்தால் ஓட்டு போடலாமா?

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை(ஏப்.19) நடைபெற உள்ளது. இந்நிலையில் கையில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதி மறுப்பு என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இது குறித்து நேற்று(ஏப்.17) விளக்கமளித்த சென்னை தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், “இது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி; வாக்குச்சாவடியில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்” என தெளிவுபடுத்தினார்.

error: Content is protected !!