Tamilnadu

News March 24, 2024

கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ

image

அத்திமலைப்பட்டு மலைகளில் காட்டுத் தீ பரவி எரிந்து வருகிறது. 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலைப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது. மேலும், இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

News March 24, 2024

செங்கல்பட்டு: சிக்னல் கோளாறு – பொதுமக்கள் அவதி

image

தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் தடத்தில் இன்று (மார்ச்-24) சிக்னல் கோளாறு ஏற்ப்பட்டுள்ளது.
அதன் காரணமாக சிங்கபெருமாள்கோயில் ரயில்வே கேட் லாக் அநாதல் இரயில்வே கேட்டை கடக்கமுடியாமல் இருபுறமும் ஆங்காங்கே வாகனங்கள் தேங்கி நின்று போக்கு
வரத்து பாதிப்பு ஏற்ப்பட்டு மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

News March 24, 2024

மக்களை மிரள வைத்த இளைஞர்கள்

image

அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரத்தில் ஏவிஎஸ் தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தொழில்நுட்பத் திருவிழாவில் பங்கேற்ற இளைஞர்கள், பைக்கில் ஸ்டண்ட் அடித்து பல்வேறு சாகசங்களை செய்து காட்டி, பார்வையாளர்களை மிரள வைத்து அசத்தினர். இந்த இளைஞர்களுக்கு பள்ளி தலைவர் ராஜவிநாயகம் , முதல்வர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

News March 24, 2024

தேர்தல் பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. அதன்படி நிர்மலா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை கோவை தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்திகுமார் இன்று (மார்ச்.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

News March 24, 2024

திண்டுக்கல்: நாளை வேட்பு மனுதாக்கல்

image

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் தாெகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் நாளை காலை 11- மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வேட்பு மனு செய்வதாக அறிவித்துள்ளார். இதற்கு ஆதரவாளர்களை தாடிக்கொம்பு சாலையில் உள்ள அஞ்சலி ரவுண்டானா அருகில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

News March 24, 2024

ஓவியங்களால் அழகான சேலம் 

image

சேலம் குரங்கு சாவடி மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டாமல் இருக்க நெடுஞ்சாலை துறையினர் தனியர் நிறுவனங்களுடன் இணைந்து ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தடையை மீறி ஓவியம் வரைந்தால் நெடுஞ்சாலை துறை சார்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தை வண்ணமிகு சேலமாக மாற்றும் வகையில் ஓவியர்கள் வண்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

News March 24, 2024

அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி

image

ஈரோடு மக்களவைத் தேர்தல் பணியில் 10, 970 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கு நான்கு கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி இன்று ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஓரிடத்தில் முதல் கட்ட பயிற்சி நடந்தது. கோபி சாரதா பள்ளியில் நடந்த பயிற்சியில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டார்.

News March 24, 2024

பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராமதாஸ்

image

திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில், விழுப்புரம் மக்களவை தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து நடைபெற்ற பொது கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசு பேசினார். இந்த நிகழ்வில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News March 24, 2024

விசிக பொதுச்செயலாளருக்கு அமைச்சர் ஆதரவு

image

விழுப்புரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரை ஆதரித்து, வானூர் திருமண மண்டபத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். 

News March 24, 2024

பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப் பள்ளியில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வாக்கு பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை இன்று 24.03.2024 தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.

error: Content is protected !!