India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,
நீலகிரி, சேலம், தேனி, கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,
கிருஷ்ணகிரி, சேலம், தேனி, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்ட 10 நாட்களாக கோவையில் தங்கி ஆதரவு திரட்டி வருகிறார் துரைராமலிங்கம். இவர் நேற்று பிரச்சாரம் முடிந்த நிலையில், அண்ணாமலை தோற்று விடுவார் என சிலர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த துரை ராமலிங்கம், அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறி கத்தியை எடுத்து அவரது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார்.
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க ஏதுவாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு வரை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது புகார்களை 1800-425-7020 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணிலும், 0427-2450031,2450032, 2450034, 2450035, 2450046 ஆகிய தொலைபேசி எண்களிலும் மற்றும் 9489939699 என்ற எண்ணுக்கு whatsapp மூலம் தெரிவிக்கலாம்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பூத் எண்.40 ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, பெரியகுளத்தில் பூத் எண்.10 வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி, போடியில் எண்.116 அரசு மேல்நிலைப்பள்ளி மேலசொக்கநாதபுரம், எண்.208 பி.சி.பட்டி பழனியப்பா பள்ளி, கம்பம் தொகுதியில் 176 உத்தமபாளையம் அல்ஹிமா பள்ளியில் பிங்க் ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன. இவற்றில் பெண் அதிகாரிகளே முழுவதும் பணிபுரிவார்கள்.
மக்களவைத் தேர்தல் நாளை 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டோர் (ம) மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என கோவை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து செல்லலாம்.
கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் பணியாளர்களை அனுப்பும் பணியினை கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அலுவலர்களுக்கு பணி ஆணையை வழங்கினார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியர் அலுவலகம் மைதானத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் என காவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் அறிவுரை வழங்கினார்.
தாம்பரம் ரயில் நிலையம் அருகில் ஆவடி, திருபெருமந்தூர் செல்ல அரசு ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். காரணம் சேர் ஆட்டோ மற்றும் தனியார் பஸ்களால் பொது மக்களுக்கு இடையூராக வாகனங்களை நிறுத்துகின்றனர் என்றும் அரசு உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.