Tamilnadu

News April 28, 2025

நாமக்கல் மலைக்கோட்டை சிறப்புகள்!

image

நாமக்கல் நகருக்கு புகழையும், பெருமையும் சேர்ப்பது நாமக்கல் மலைக்கோட்டை. இது 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டுள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில் நரசிம்மர் கோயிலும், தர்காவும் உள்ளது. நாமக்கல்லில் பிரபலமான சுற்றுலா தலமாகவும் மலைக்கோட்டை விளங்குகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட, திப்பு சுல்தான் கோட்டையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. SHARE IT!

News April 28, 2025

தென்காசி மாவட்ட மக்களுக்கு முக்கிய  அறிவிப்பு

image

இந்திய ராணுவத்திற்கு நிதியளிக்குமாறு வாட்ஸ் அப்பில் பரவி வந்த செய்திக்கு பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பில் தவறான தகவல் உலாவி வருவதை சுட்டிக்காட்டி பொதுமக்கள் இது போன்ற மோசடி தகவலை நம்ப கூடாது என்று விளக்கம் அளித்துள்ளது. எனவே தென்காசி மக்கள் இதுபோன்ற தவறான செய்தி வந்தால் தவிர்க்கவும்.

News April 28, 2025

சேலத்தில் பிரம்மாண்ட சிலை பிரதிஷ்டை!

image

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஊமகவுண்டன்பட்டி பகுதியில் அருள்மிகு எல்லை பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நேற்று 12 டன் எடை கொண்ட, ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட, 8 கைகளுடன் சாந்த சுரூபமாக காட்சியளிக்கும் 16 அடி பிரம்மாண்ட பத்ரகாளி சிலை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News April 28, 2025

கிருஷ்ணகிரி வி.ஏ.ஓ. தூக்கிட்டுத் தற்கொலை

image

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டி கவுண்டன் உரை சேர்ந்தவர் பூங்காவனம் (52). வி.மாதேப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த இவர், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் 14ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் தனது வீட்டருகே உள்ள மாட்டு தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 01.05.2025 அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி  உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 

News April 28, 2025

பொதுமக்களிடம் இருந்து 710 புகார் மனுக்கள் பெறப்பட்டன

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 710 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News April 28, 2025

சேலம் வழியாக மதுரைக்கு சிறப்பு ரயில்

image

கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 30- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து மதுரைக்கும், மறுமார்க்கத்தில், மே 01- ஆம் தேதி மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

News April 28, 2025

ஜவாஹிருல்லா வழக்கில் இடைக்கால தடை

image

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து ரூ.1.50 கோடி நிதி பெற்றதாக பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதை எதிர்த்து ஜவாஹிருல்லா ஐகோர்ட்டில் முறையிட அங்கும் தண்டனை உறுதிசெய்யப்பட அதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓர் ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

News April 28, 2025

மாற்றுப் பணியில் சென்று ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு 

image

மாநில பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் விடுத்துள்ள சுற்றறிக்கைபடி, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆம் கல்வியாண்டு பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாற்று பணி மூலம் பணிபுரிய உத்தரவு பெற்று சென்ற அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவர்களின் பள்ளியில் மீண்டும் சேர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

News April 28, 2025

தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில்

image

கோடை விடுமுறையையொட்டி சென்னை தாம்பரம் – திருச்சி இடையே நாளை (ஏப்ரல் 29) முதல் ஜூன் 29ஆம் தேதி வரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும்.

error: Content is protected !!