India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் மும்முரம்மாக இறங்கியுள்ளன. அதன்படி, சேலம் தெற்கு தொகுதிகுட்பட்ட பகுதி, கோட்ட செயலாளர்கள் மற்றும் பகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று(மார்ச் 26) நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் திருவிழாவில் வாக்காளர்கள் 100% வாக்குப்பதிவு செய்வதை வலியுறுத்தும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ள தேர்தல் திருவிழா அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. திருமண அழைப்பிதழ் போன்று தற்போது தேர்தல் திருவிழா அழைப்பிதழ் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே உள்ள இந்து வித்யாலயா CBSE பள்ளியின் ஆண்டு விழா நேற்று(மார்ச் 27) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சன் டிவி பட்டிமன்ற பேச்சாளர் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு நடப்பு கல்வியாண்டில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனுரில் உள்ள தனது தாயிடம் வாழ்த்துப் பெற்றார். இவர் கடந்த முறை சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விசிக நிர்வாகிகள் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ மூலமாக 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் நேற்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று(மார்ச் 27) பால் விநியோகம் சில மணி நேரம் தாமதமாக வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், கொரட்டூர், மயிலாப்பூர், வில்லிவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பால் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல். மேலும், இத்தகைய தாமதத்திற்கு வருந்துவதாகவும் ஆவின் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.